ஆப்ரிக்க நாடான கானாவில் சுரங்கப் பணிகளுக்காக வெடிபொருள்களை ஏற்றிச் சென்ற வாகனம் வெடித்து விபத்துக்குள்ளானது.
அந்நாட்டின் தலைநகரான போகோசோவிலிருந்து 300 கிமீ தூரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 17க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், 57 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர வெடிவிபத்தில் 500 கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் விபத்துக்கான காரணம் குறித்து அரசு விரைவில் விசாரணை நடத்தும் எனவும் அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்த சில வாரங்களில் உச்சம் தொடும் கோவிட் - உலக சுகாதார அமைப்பு