ETV Bharat / entertainment

தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடும் "காந்தாரா" - வசூல் சாதனை!

author img

By

Published : Oct 26, 2022, 6:26 PM IST

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த 'காந்தாரா' திரைப்படம் தமிழ்நாட்டில் 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை படைத்து வருகிறது.

kanthara
kanthara

சென்னை: நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்த திரைப்படம் 'காந்தாரா'. 'கேஜிஎஃப்' திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடும்
தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடும் "காந்தாரா"

அக்டோபர் 15ஆம் தேதியன்று தமிழக திரையரங்குகளில் 'காந்தாரா' படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தீபாவளிக்கு வெளியான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது.

ரிஷப் ஷெட்டி உணர்வுபூர்வமாக நடித்திருக்கும் இந்த திரைப்படம், இன்றும் தமிழகம் முழுவதும் 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை படைத்து வருகிறது என திரையுலகினர் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர். 'காந்தாரா' திரைப்படம் உலகமெங்கும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் காந்தாரா வசூல் சாதனை
தமிழ்நாட்டில் காந்தாரா வசூல் சாதனை

இதையும் படிங்க: ராமர் பாலத்தை கட்டியது ராமர்..? ராம் சேது பட சர்ச்சை..!

சென்னை: நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்த திரைப்படம் 'காந்தாரா'. 'கேஜிஎஃப்' திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் காவல் தெய்வத்தை மையப்படுத்திய 'காந்தாரா' திரைப்படம், அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடும்
தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடும் "காந்தாரா"

அக்டோபர் 15ஆம் தேதியன்று தமிழக திரையரங்குகளில் 'காந்தாரா' படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தீபாவளிக்கு வெளியான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது.

ரிஷப் ஷெட்டி உணர்வுபூர்வமாக நடித்திருக்கும் இந்த திரைப்படம், இன்றும் தமிழகம் முழுவதும் 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை படைத்து வருகிறது என திரையுலகினர் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர். 'காந்தாரா' திரைப்படம் உலகமெங்கும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் காந்தாரா வசூல் சாதனை
தமிழ்நாட்டில் காந்தாரா வசூல் சாதனை

இதையும் படிங்க: ராமர் பாலத்தை கட்டியது ராமர்..? ராம் சேது பட சர்ச்சை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.