ETV Bharat / entertainment

HBD Goundamani: கவுண்டமணி பிறந்தநாள் இன்று..! தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கவுண்டர்ஸ்..!

author img

By

Published : May 25, 2023, 2:24 PM IST

Updated : May 25, 2023, 2:30 PM IST

தமிழ் சினிமாவில் இரு தசாப்தத்தையே தன்னை நோக்கி வரவைத்து, இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தன்னுடைய நக்கலான நகைச்சுவையால் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நபராகவே கருதப்படும் கவுண்டமணியின் திரை பயணத்தை காணலாம்.

‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..’ - தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கவுண்டமணியின் கவுண்டர்ஸ்!
‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..’ - தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கவுண்டமணியின் கவுண்டர்ஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும், தனது தனித்தன்மையான காமெடிகளால் இப்போது உள்ள 2K கிட்ஸ்கள் வரை பிடித்தமான நடிகராக இருப்பவர், நடிகர் கவுண்டமணி. 70களில் தொடங்கி இப்போது உள்ள தலைமுறையினர் வரை அனைவருக்கும் பிடித்தமான நடிகராக இருப்பது ஒன்றும் அத்தனை சுலபமானது அல்ல.

அதனால்தான் இவர் மற்றவர்களைக் காட்டிலும் முக்கியமான கலைஞனாக அறியப்படுகிறார். உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஊரில் பிறந்த சுப்பிரமணி (கவுண்டமணியின் இயற்பெயர்),‌ சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நாடகங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு முன்பே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.

தொடக்க காலங்களில் நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். ‘ராமன் எத்தனை ராமனடி’ படம்தான் அவரது முதல் படமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படத்தில், பரட்டையாக நடித்த ரஜினிகாந்த்க்கு அல்லக்கையாக வந்து ‘பத்த வெச்சுட்டயே பரட்ட’ என்ற வசனம்தான் இவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

இன்னும் சொல்லப்போனால், இந்தப் படத்தில் ரஜினிகாந்தின் ஊதியத்தை விட, கவுண்டமணியின் சம்பளம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதன் பிறகு பாரதிராஜாவின் சில படங்களில் நடித்தார், கவுண்டமணி. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தில் டெய்லராக வரும் கவுண்டமணியும், கல்லாப்பெட்டி சிங்காரமும் செய்யும் நகைச்சுவைகள் இன்று வரை ரசிக்கப்படுகிறது.

அதன் பிறகுதான் அந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டணி உருவாகிறது. ஹாலிவுட்டில் புகழ் பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான லாரல் - ஹார்டிக்கு இணையான ஜோடி தமிழ் சினிமாவில் உருவானது. அதுதான் கவுண்டமணி - செந்தில் கூட்டணி. கவுண்டமணி எப்போதுமே கொஞ்சம் நாடகத் தன்மையுடன் தனது சக நடிகர்களை அடிப்பார்.

அது ரசிகர்களை மகிழ்வித்தது. இதுவே பின்னாளில் வழக்கமாகி விட்டது. எப்போதும் செந்திலை அடித்துக் கொண்டு இருக்கும் காமெடி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. டாம் அண்ட் ஜெர்ரி போல. இதனை அப்படியே பிடித்துக் கொண்ட இந்த ஜோடி, தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி ஏற்றியது.

90கள் மற்றும் 2000 தொடக்கத்தில் கவுண்டமணி காமெடி இல்லாத படங்களே இல்லை என்ற நிலை மாறியது. அனைத்து கதாநாயகர்களும் முதலில் கவுண்டமணியின் கால்ஷீட்டை வாங்கி விட்டு வாருங்கள் என்று சொல்லத் தொடங்கினர். அந்த அளவுக்கு அத்தனை படங்களிலும் கவுண்டமணிதான்.

அதுவும் சத்யராஜ் உடன் இவர் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே சிரிப்பு சரவெடிதான். நடிகன், வேலை கிடைச்சிருச்சு, ரிக்ஷா மாமா, மாமன் மகள், வில்லாதி வில்லன் என சொல்லிக்கொண்டே போகலாம். நாடக காலத்தில் இருந்தே வசனங்களுக்கு ஏதாவது கவுண்ட்டர் கொடுத்து பேசிவிடுவதால், இவருக்கு கவுண்ட்டர் மணி என பெயர் வந்தது.

அதுவே பின்னாளில் கவுண்டமணி என்று மாறிவிட்டது. இந்த பழக்கமே சினிமாவிலும் அவருக்கு உதவியது. யார் என்ன பேசினாலும், உடனே அதற்கு நகைச்சுவையாக கவுண்ட்டர் அடித்து விடுவார். நடிகன் படத்தில் சத்யராஜ் பிரியாணி வாங்கி வருவார். ‘என்னய்யா பிரியாணி புளிக்குது. இதுலயும் போர்ஜரியா?’ என்பார் கவுண்டமனி.

சூரியன் படத்தில் கவுண்டமணி செய்த அலப்பறைகள் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இப்படி எந்த நடிகராக இருந்தாலும் அவர்களை கிண்டல் செய்து விடுவார். அது அந்த நடிகர்களையும் புண்படுத்தாது என்பதுதான் இங்கு சிறப்பு. இதனால் ரஜினி தொடங்கி எல்லா நடிகர்களும் கவுண்டமணி கிண்டல் செய்தால் கண்டு கொள்ள மாட்டார்கள்.

படப்பிடிப்பு சமயத்தில் கவுண்டமணி அடித்த காமெடிக்கு நடித்துக் கொண்டு இருக்கும்போதே நடிகர்கள் சிரித்து விடும் நிலைமையும் ஏற்பட்டதுண்டு. அதனை நன்கு கவனித்தால் படத்திலும் தெரியும். பிரம்மா படத்தில் குஷ்பூவைத் தேடி ஒரு பள்ளிக்குச் செல்லும் காட்சியில், கவுண்டமணியின் நக்கல் காமெடியை கட்டுப்படுத்த முடியாமல் திரையிலேயே சிரித்து சமாளித்துக் கொண்டு இருப்பார் சத்யராஜ் ‌. இப்போது பார்த்தாலும் அது தெரியும்.

சத்யராஜ் மட்டுமின்றி ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, பிரபு, சரத்குமார், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் என எந்த நடிகர்களுடன் இணைந்து நடித்தாலும் அவர்களுடன் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகிறது. அதை அவர்களின் படங்களைப் பார்த்தாலே தெரியும்.

அப்படிப்பட்ட கலைஞன் கவுண்டமணி எந்த எல்லைக்குள்ளும் அடைபடாமல் சமூக சிந்தனை கருத்துக்களையும் தனது படங்களில் சொல்லி உள்ளார். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையும் திட்டுவார், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையும் திட்டுவார். இப்படி எல்லா தரப்பு அவலங்களையும் தனது நகைச்சுவையால் கேள்வி கேட்க அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.

சாதிய ஏற்றத் தாழ்வுகளையும், மக்கள் இடையே நிலவிய அறியாமைகளையும் தனது நகைச்சுவையால் சாட்டையடி அடித்தவர் கவுண்டமணி. இப்படி எல்லா விதத்திலும் தனது நகைச்சுவையால் பேசியுள்ளார். கடைசியாக ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை’ என்ற படத்தில் நடித்தவர், தற்போது பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதேநேரம், நகைச்சுவை நடிகருக்கு துளிர் விடும் ஹீரோ கதாபாத்திரம் கவுண்டமணிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? படையப்பா வில்லி ரம்யா கிருஷ்ணன் உடன் ஜோடியாக நடித்த ராஜா எங்க ராஜா, நீங்களும் ஹீரோதான், பிறந்தேன் வளர்ந்தேன் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த கவுண்டமணி சறுக்கலை மட்டுமே சந்தித்தார்.

எனினும், அதனையும் தாண்டி பல வெற்றிப் படிகளை தமிழ் சினிமாவின் தடங்களாக மாற்றிய கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் ஈடிவி பாரத் செய்திகள் பெருமை கொள்கிறது.

இதையும் படிங்க: மீண்டும் மோதுகிறதா அஜித், விஜய் படங்கள்? - வரவேற்பும், எதிர்ப்பும்...!

சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும், தனது தனித்தன்மையான காமெடிகளால் இப்போது உள்ள 2K கிட்ஸ்கள் வரை பிடித்தமான நடிகராக இருப்பவர், நடிகர் கவுண்டமணி. 70களில் தொடங்கி இப்போது உள்ள தலைமுறையினர் வரை அனைவருக்கும் பிடித்தமான நடிகராக இருப்பது ஒன்றும் அத்தனை சுலபமானது அல்ல.

அதனால்தான் இவர் மற்றவர்களைக் காட்டிலும் முக்கியமான கலைஞனாக அறியப்படுகிறார். உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஊரில் பிறந்த சுப்பிரமணி (கவுண்டமணியின் இயற்பெயர்),‌ சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நாடகங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு முன்பே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.

தொடக்க காலங்களில் நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். ‘ராமன் எத்தனை ராமனடி’ படம்தான் அவரது முதல் படமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படத்தில், பரட்டையாக நடித்த ரஜினிகாந்த்க்கு அல்லக்கையாக வந்து ‘பத்த வெச்சுட்டயே பரட்ட’ என்ற வசனம்தான் இவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

இன்னும் சொல்லப்போனால், இந்தப் படத்தில் ரஜினிகாந்தின் ஊதியத்தை விட, கவுண்டமணியின் சம்பளம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதன் பிறகு பாரதிராஜாவின் சில படங்களில் நடித்தார், கவுண்டமணி. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தில் டெய்லராக வரும் கவுண்டமணியும், கல்லாப்பெட்டி சிங்காரமும் செய்யும் நகைச்சுவைகள் இன்று வரை ரசிக்கப்படுகிறது.

அதன் பிறகுதான் அந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டணி உருவாகிறது. ஹாலிவுட்டில் புகழ் பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான லாரல் - ஹார்டிக்கு இணையான ஜோடி தமிழ் சினிமாவில் உருவானது. அதுதான் கவுண்டமணி - செந்தில் கூட்டணி. கவுண்டமணி எப்போதுமே கொஞ்சம் நாடகத் தன்மையுடன் தனது சக நடிகர்களை அடிப்பார்.

அது ரசிகர்களை மகிழ்வித்தது. இதுவே பின்னாளில் வழக்கமாகி விட்டது. எப்போதும் செந்திலை அடித்துக் கொண்டு இருக்கும் காமெடி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. டாம் அண்ட் ஜெர்ரி போல. இதனை அப்படியே பிடித்துக் கொண்ட இந்த ஜோடி, தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி ஏற்றியது.

90கள் மற்றும் 2000 தொடக்கத்தில் கவுண்டமணி காமெடி இல்லாத படங்களே இல்லை என்ற நிலை மாறியது. அனைத்து கதாநாயகர்களும் முதலில் கவுண்டமணியின் கால்ஷீட்டை வாங்கி விட்டு வாருங்கள் என்று சொல்லத் தொடங்கினர். அந்த அளவுக்கு அத்தனை படங்களிலும் கவுண்டமணிதான்.

அதுவும் சத்யராஜ் உடன் இவர் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே சிரிப்பு சரவெடிதான். நடிகன், வேலை கிடைச்சிருச்சு, ரிக்ஷா மாமா, மாமன் மகள், வில்லாதி வில்லன் என சொல்லிக்கொண்டே போகலாம். நாடக காலத்தில் இருந்தே வசனங்களுக்கு ஏதாவது கவுண்ட்டர் கொடுத்து பேசிவிடுவதால், இவருக்கு கவுண்ட்டர் மணி என பெயர் வந்தது.

அதுவே பின்னாளில் கவுண்டமணி என்று மாறிவிட்டது. இந்த பழக்கமே சினிமாவிலும் அவருக்கு உதவியது. யார் என்ன பேசினாலும், உடனே அதற்கு நகைச்சுவையாக கவுண்ட்டர் அடித்து விடுவார். நடிகன் படத்தில் சத்யராஜ் பிரியாணி வாங்கி வருவார். ‘என்னய்யா பிரியாணி புளிக்குது. இதுலயும் போர்ஜரியா?’ என்பார் கவுண்டமனி.

சூரியன் படத்தில் கவுண்டமணி செய்த அலப்பறைகள் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இப்படி எந்த நடிகராக இருந்தாலும் அவர்களை கிண்டல் செய்து விடுவார். அது அந்த நடிகர்களையும் புண்படுத்தாது என்பதுதான் இங்கு சிறப்பு. இதனால் ரஜினி தொடங்கி எல்லா நடிகர்களும் கவுண்டமணி கிண்டல் செய்தால் கண்டு கொள்ள மாட்டார்கள்.

படப்பிடிப்பு சமயத்தில் கவுண்டமணி அடித்த காமெடிக்கு நடித்துக் கொண்டு இருக்கும்போதே நடிகர்கள் சிரித்து விடும் நிலைமையும் ஏற்பட்டதுண்டு. அதனை நன்கு கவனித்தால் படத்திலும் தெரியும். பிரம்மா படத்தில் குஷ்பூவைத் தேடி ஒரு பள்ளிக்குச் செல்லும் காட்சியில், கவுண்டமணியின் நக்கல் காமெடியை கட்டுப்படுத்த முடியாமல் திரையிலேயே சிரித்து சமாளித்துக் கொண்டு இருப்பார் சத்யராஜ் ‌. இப்போது பார்த்தாலும் அது தெரியும்.

சத்யராஜ் மட்டுமின்றி ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, பிரபு, சரத்குமார், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் என எந்த நடிகர்களுடன் இணைந்து நடித்தாலும் அவர்களுடன் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகிறது. அதை அவர்களின் படங்களைப் பார்த்தாலே தெரியும்.

அப்படிப்பட்ட கலைஞன் கவுண்டமணி எந்த எல்லைக்குள்ளும் அடைபடாமல் சமூக சிந்தனை கருத்துக்களையும் தனது படங்களில் சொல்லி உள்ளார். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையும் திட்டுவார், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையும் திட்டுவார். இப்படி எல்லா தரப்பு அவலங்களையும் தனது நகைச்சுவையால் கேள்வி கேட்க அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.

சாதிய ஏற்றத் தாழ்வுகளையும், மக்கள் இடையே நிலவிய அறியாமைகளையும் தனது நகைச்சுவையால் சாட்டையடி அடித்தவர் கவுண்டமணி. இப்படி எல்லா விதத்திலும் தனது நகைச்சுவையால் பேசியுள்ளார். கடைசியாக ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை’ என்ற படத்தில் நடித்தவர், தற்போது பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதேநேரம், நகைச்சுவை நடிகருக்கு துளிர் விடும் ஹீரோ கதாபாத்திரம் கவுண்டமணிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? படையப்பா வில்லி ரம்யா கிருஷ்ணன் உடன் ஜோடியாக நடித்த ராஜா எங்க ராஜா, நீங்களும் ஹீரோதான், பிறந்தேன் வளர்ந்தேன் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த கவுண்டமணி சறுக்கலை மட்டுமே சந்தித்தார்.

எனினும், அதனையும் தாண்டி பல வெற்றிப் படிகளை தமிழ் சினிமாவின் தடங்களாக மாற்றிய கவுண்டமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் ஈடிவி பாரத் செய்திகள் பெருமை கொள்கிறது.

இதையும் படிங்க: மீண்டும் மோதுகிறதா அஜித், விஜய் படங்கள்? - வரவேற்பும், எதிர்ப்பும்...!

Last Updated : May 25, 2023, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.