ETV Bharat / crime

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - இளைஞர் உயிரிழப்பு!

author img

By

Published : May 4, 2021, 8:00 PM IST

இருசக்கர வாகனமும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இளைஞர் உயிரிழப்பு
youngster death

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள உசிலை ஊரணி என்ற இடத்தில் மணப்பாறை நோக்கி வந்த இருசக்கர வாகனமும், மணப்பாறையிருந்து மேலத்தானியம் நோக்கி சென்ற அரசு பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், விபத்தில் இறந்தவர், புதுக்கோட்டை மாவட்டம் ராஜாளிபட்டி அருகேயுள்ள குளவாய்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் கார்த்திக்(28) என தெரியவந்தது.

பின்னர் காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மணப்பாறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுபாட்டிலால் தகராறு: நண்பன் குத்திக்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள உசிலை ஊரணி என்ற இடத்தில் மணப்பாறை நோக்கி வந்த இருசக்கர வாகனமும், மணப்பாறையிருந்து மேலத்தானியம் நோக்கி சென்ற அரசு பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், விபத்தில் இறந்தவர், புதுக்கோட்டை மாவட்டம் ராஜாளிபட்டி அருகேயுள்ள குளவாய்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் கார்த்திக்(28) என தெரியவந்தது.

பின்னர் காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மணப்பாறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுபாட்டிலால் தகராறு: நண்பன் குத்திக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.