ETV Bharat / crime

தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய கொள்ளையர் கைது!

author img

By

Published : May 22, 2021, 12:25 PM IST

நகை வியாபாரியைத் தாக்கி பணம், நகைகளைப் பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய கொள்ளையர்
தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய கொள்ளையர்

சென்னை: நகை கொள்ளையில் கைது செய்யப்பட்ட நபருக்கு தீவிரவாத அமைப்போடு தொடர்புடையதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை, பட்டாளம் ஸ்டிராஹன்ஸ் சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுராஜ் ஜெயின். இவர் சவுகார்பேட்டையில் தங்க நகைகள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 5ஆம் தேதியன்று சவுகார்பேட்டை கடையிலிருந்து ரூ. 7 லட்சம் பணம், 282 கிராம் தங்க நகைகளுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பெரியமேடு அல்லிக்குளம், லிங்க் ரோடு அருகே சுராஜ் சென்று கொண்டிருந்த போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் சுராஜை வழிமறித்து, தாக்கி அவர் வைத்திருந்த ரூ.7 லட்சம், 282 கிராம் தங்க நகைகள் அடங்கிய பையை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து சுராஜ், பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு அருகில் பொருத்தப்படிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து, கொள்ளையில் ஈடுபட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த சபியுல்லா யாசின் என்பவரை கடந்த 10ஆம் தேதி பெரியமேடு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொள்ளையடித்த ரூ. 7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கொள்ளையில் தொடர்புடைய மற்றொரு கொள்ளையனை தேடி வந்தனர். அவர் திருவொற்றியூரைச் சேர்ந்த ரபீக் என்ற நூர்தீன் என்பது தெரிய வந்தது. அவரையும் பெரியமேடு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அல்உம்மா தீவிரவாத அமைப்போடு தொடர்புடையவர் என தெரிய வந்துள்ளது.

கைதான ரபீக் மீது, தீவிரவாத அமைப்பிற்கு நிதி திரட்டி வழங்குதல், கள்ள நோட்டு என என்ஐஏ-இல் வழக்கு நிலுவையில் இருக்கின்றன. காவல்நிலையத்தில் 13க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர் சென்ட்ரல் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பு இருந்ததாக ஏற்கனவே என்ஐஏவால் கைதானவர் என்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இவரை என்ஐஏ அலுவலர்களும் தேடி வருகின்றனர். ரபீக்கிடமிருந்து 70 கிராம் தங்கம், பைக் ஒன்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: பூட்டியிருந்த கடையை உடைத்து கொள்ளை!

சென்னை: நகை கொள்ளையில் கைது செய்யப்பட்ட நபருக்கு தீவிரவாத அமைப்போடு தொடர்புடையதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை, பட்டாளம் ஸ்டிராஹன்ஸ் சாலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுராஜ் ஜெயின். இவர் சவுகார்பேட்டையில் தங்க நகைகள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 5ஆம் தேதியன்று சவுகார்பேட்டை கடையிலிருந்து ரூ. 7 லட்சம் பணம், 282 கிராம் தங்க நகைகளுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பெரியமேடு அல்லிக்குளம், லிங்க் ரோடு அருகே சுராஜ் சென்று கொண்டிருந்த போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் சுராஜை வழிமறித்து, தாக்கி அவர் வைத்திருந்த ரூ.7 லட்சம், 282 கிராம் தங்க நகைகள் அடங்கிய பையை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து சுராஜ், பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு அருகில் பொருத்தப்படிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து, கொள்ளையில் ஈடுபட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த சபியுல்லா யாசின் என்பவரை கடந்த 10ஆம் தேதி பெரியமேடு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொள்ளையடித்த ரூ. 7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கொள்ளையில் தொடர்புடைய மற்றொரு கொள்ளையனை தேடி வந்தனர். அவர் திருவொற்றியூரைச் சேர்ந்த ரபீக் என்ற நூர்தீன் என்பது தெரிய வந்தது. அவரையும் பெரியமேடு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அல்உம்மா தீவிரவாத அமைப்போடு தொடர்புடையவர் என தெரிய வந்துள்ளது.

கைதான ரபீக் மீது, தீவிரவாத அமைப்பிற்கு நிதி திரட்டி வழங்குதல், கள்ள நோட்டு என என்ஐஏ-இல் வழக்கு நிலுவையில் இருக்கின்றன. காவல்நிலையத்தில் 13க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர் சென்ட்ரல் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பு இருந்ததாக ஏற்கனவே என்ஐஏவால் கைதானவர் என்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இவரை என்ஐஏ அலுவலர்களும் தேடி வருகின்றனர். ரபீக்கிடமிருந்து 70 கிராம் தங்கம், பைக் ஒன்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: பூட்டியிருந்த கடையை உடைத்து கொள்ளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.