ETV Bharat / crime

தெரு நாய்களை தாக்கியதை கண்டித்த காவலரை கட்டையால் அடித்த 5 பேர் கைது

சென்னை ராயபுரத்தில் தெரு நாய்களை தாக்கியதை கண்டித்த முதல்நிலைக் காவலரை கட்டையால் தாக்கிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Oct 9, 2022, 10:16 PM IST

தெரு நாய்களை தாக்கியதை கண்டித்த காவலர்.. கட்டையால் தாக்கிய ஐந்து பேர் கைது...
தெரு நாய்களை தாக்கியதை கண்டித்த காவலர்.. கட்டையால் தாக்கிய ஐந்து பேர் கைது...

சென்னை: ராயபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் காவலர் ராஜேஷ். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். ராஜேஷ், ஹோட்டலில் வீணாக குப்பைத் தொட்டியில் போடப்படும் உணவுகளை சேகரித்து தெரு நாய்களுக்கு உணவளித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு (அக்.08) அதே போல் தெருவோரம் உள்ள நாய்களுக்கு உணவளித்து விட்டுச் சென்று கொண்டிருந்தார். அப்போது சிலர் நாய்களை தாக்குவதை கண்டு அவர்களை தட்டி கேட்டார். அப்போது அங்கிருந்த ஆறு பேர் காவலர் ராஜேஷை கட்டையால் தாக்கி விட்டு, கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கலியை பறித்துச் சென்றனர்.

பின்னர் இது குறித்து ராஜேஷ் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்து ஐந்து பேரையும் விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: போதையில் வாகனம் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞர் - தாயும் சேயும் உயிரிழப்பு

சென்னை: ராயபுரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் காவலர் ராஜேஷ். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். ராஜேஷ், ஹோட்டலில் வீணாக குப்பைத் தொட்டியில் போடப்படும் உணவுகளை சேகரித்து தெரு நாய்களுக்கு உணவளித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு (அக்.08) அதே போல் தெருவோரம் உள்ள நாய்களுக்கு உணவளித்து விட்டுச் சென்று கொண்டிருந்தார். அப்போது சிலர் நாய்களை தாக்குவதை கண்டு அவர்களை தட்டி கேட்டார். அப்போது அங்கிருந்த ஆறு பேர் காவலர் ராஜேஷை கட்டையால் தாக்கி விட்டு, கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கலியை பறித்துச் சென்றனர்.

பின்னர் இது குறித்து ராஜேஷ் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்து ஐந்து பேரையும் விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: போதையில் வாகனம் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞர் - தாயும் சேயும் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.