ETV Bharat / crime

கள்ளச்சாராயம் விற்ற கும்பல் கைது: சாராய ஊறல் அழிப்பு!

author img

By

Published : Jun 2, 2021, 12:14 PM IST

திருச்சி: கள்ளச்சாராய ஊறல் அமைத்து சாராயம் விற்பனை செய்து வந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளச்சாராயம் விற்ற கும்பல் கைது: சாராய ஊறல் அழிப்பு!
கள்ளச்சாராயம் விற்ற கும்பல் கைது: சாராய ஊறல் அழிப்பு!

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து துறையூர் காவல் துறை ஆய்வாளர் விதுன்குமார் உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையிலான காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, நாகநல்லூர் காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்த நடேசன், நெட்டவேலம்பட்டியை சேர்ந்த மணி, சுப்ரமணி, சதீஸ் ஆகியோர் கள்ளச் சாராயம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்த கொப்பம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் 350 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது. 13 லிட்டர் சாராயம், மது பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து துறையூர் காவல் துறை ஆய்வாளர் விதுன்குமார் உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையிலான காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, நாகநல்லூர் காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்த நடேசன், நெட்டவேலம்பட்டியை சேர்ந்த மணி, சுப்ரமணி, சதீஸ் ஆகியோர் கள்ளச் சாராயம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்த கொப்பம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் 350 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது. 13 லிட்டர் சாராயம், மது பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.