ETV Bharat / crime

விவசாயி கட்டையால் அடித்துக் கொலை!

author img

By

Published : Feb 22, 2021, 6:46 AM IST

திருவண்ணாமலை: இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் விவசாயி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Farmer murder
விவசாயி கொலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சிறுகிளாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு (45). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

துரைக்கண்ணுவின் பெரியப்பா முனுசாமிக்கு சொந்தமான வீட்டை விலைக்கு வாங்க அவர் முயன்றுள்ளார். அந்த வீட்டை வாங்குவதில் துரைக்கண்ணு உறவினரான துரை என்பவரும் முயன்றுள்ளார். இதனால் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக துரைக்கண்ணு மற்றும் துரை உறவினர்களிடையே தகராறு ஏற்பட்டுளளது. அப்போது ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.

இதில் துரைக்கண்ணு கட்டையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.

சென்னை அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து துரைக்கண்ணுவின் மகன் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கலசப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, துரை(35 ), அவரது மனைவி தீபா(30 ), துரையின் தந்தை முனுசாமி(54) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மைசூரில் பயங்கரம்... பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற கும்பல்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சிறுகிளாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு (45). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

துரைக்கண்ணுவின் பெரியப்பா முனுசாமிக்கு சொந்தமான வீட்டை விலைக்கு வாங்க அவர் முயன்றுள்ளார். அந்த வீட்டை வாங்குவதில் துரைக்கண்ணு உறவினரான துரை என்பவரும் முயன்றுள்ளார். இதனால் அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக துரைக்கண்ணு மற்றும் துரை உறவினர்களிடையே தகராறு ஏற்பட்டுளளது. அப்போது ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.

இதில் துரைக்கண்ணு கட்டையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.

சென்னை அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து துரைக்கண்ணுவின் மகன் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கலசப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, துரை(35 ), அவரது மனைவி தீபா(30 ), துரையின் தந்தை முனுசாமி(54) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மைசூரில் பயங்கரம்... பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற கும்பல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.