ETV Bharat / city

தாயை எரித்துக்கொன்ற வழக்கு: மகன், மருமகளுக்கு ஆயுள் தண்டனை

author img

By

Published : Nov 6, 2019, 9:20 AM IST

வேலூர்: சொத்தைப் பிரித்துக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மகன் - மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

vellore-husband-wife-got-life-imprisonment-

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பள்ளிகுப்பம் கீழ் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி ராணி (60) இவர்களுக்கு ஆறுமுகம் (34) என்ற மகனும் ஆனந்தி, பொன்னியம்மாள் ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.

இதில் ஆறுமுகத்திற்கு பிரியா என்பவருடன் திருமணமாகி மனைவியுடன் வசித்துவருகிறார். அதேபோல் ஆனந்தி, பொன்னியம்மாள் ஆகியோருக்கும் வேலாயுதம் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் வேலாயுதம் சில ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தார். வேலாயுதத்திற்கு ஏழு ஏக்கர் நிலம் ஒரு அரிசி ஆலை என மொத்தம் பத்து கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளன.

எனவே இவரின் சொத்துக்கள் அனைத்தையும் தனது பெயருக்கு எழுதி தரும்படி தனது தாய் ராணியிடம் ஆறுமுகம் கேட்டிருக்கிறார். அதற்கு ராணி அவருக்கு மட்டும் கொடுக்க முடியாது அவரது சகோதரிகளுக்கும் சேர்த்துதான் சொத்தைப் பிரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராணிக்கும் ஆறுமுகத்துக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 25.07 2017 அன்று ராணி தனது விவசாய நிலத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தப்போது அங்கு சென்று ஆறுமுகமும் அவரது மனைவி பிரியாவும், சொத்தை எழுதி தரும்படி மீண்டும் ராணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு ராணி மறுத்ததால் ஆத்திரத்தில் மாடு கட்டும் கயிறை கொண்டு ராணியை ஆறுமுகம், பிரியா அடித்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு வரவழைத்து தலையணையை கொண்டு ராணியின் முகத்தில் அழுத்தி இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து கொலையை மறைப்பதற்காக ராணியின் உடலை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளனர். இதற்கிடையில் தனது தாயை காணவில்லை என்று ராணியின் மூத்த மகள் ஆனந்தி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் ஆறுமுகம்தான் தனது மனைவியுடன் சேர்ந்து சொத்திற்காக தனது தாயை எரித்துக் கொலை செய்தது வாக்கு மூலத்தில் தெரியவந்தது.

வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆறுமுகம் அவரது மனைவி பிரியா

அதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நீதிபதி குணசேகரன் தீர்ப்பு அளித்தார். அதில் ஆறுமுகம், பிரியா மீது கொலைக் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா இரண்டாயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் குற்றச்செய்திகளை படிக்க :

மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்திய தாயை கொலை செய்த மகள்!

சாதி மறுப்புத் திருமணம்: இளைஞர் வெட்டிக் கொலை

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பள்ளிகுப்பம் கீழ் மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி ராணி (60) இவர்களுக்கு ஆறுமுகம் (34) என்ற மகனும் ஆனந்தி, பொன்னியம்மாள் ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.

இதில் ஆறுமுகத்திற்கு பிரியா என்பவருடன் திருமணமாகி மனைவியுடன் வசித்துவருகிறார். அதேபோல் ஆனந்தி, பொன்னியம்மாள் ஆகியோருக்கும் வேலாயுதம் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் வேலாயுதம் சில ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தார். வேலாயுதத்திற்கு ஏழு ஏக்கர் நிலம் ஒரு அரிசி ஆலை என மொத்தம் பத்து கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளன.

எனவே இவரின் சொத்துக்கள் அனைத்தையும் தனது பெயருக்கு எழுதி தரும்படி தனது தாய் ராணியிடம் ஆறுமுகம் கேட்டிருக்கிறார். அதற்கு ராணி அவருக்கு மட்டும் கொடுக்க முடியாது அவரது சகோதரிகளுக்கும் சேர்த்துதான் சொத்தைப் பிரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராணிக்கும் ஆறுமுகத்துக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 25.07 2017 அன்று ராணி தனது விவசாய நிலத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தப்போது அங்கு சென்று ஆறுமுகமும் அவரது மனைவி பிரியாவும், சொத்தை எழுதி தரும்படி மீண்டும் ராணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு ராணி மறுத்ததால் ஆத்திரத்தில் மாடு கட்டும் கயிறை கொண்டு ராணியை ஆறுமுகம், பிரியா அடித்துள்ளனர். பின்னர் வீட்டிற்கு வரவழைத்து தலையணையை கொண்டு ராணியின் முகத்தில் அழுத்தி இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து கொலையை மறைப்பதற்காக ராணியின் உடலை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளனர். இதற்கிடையில் தனது தாயை காணவில்லை என்று ராணியின் மூத்த மகள் ஆனந்தி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் ஆறுமுகம்தான் தனது மனைவியுடன் சேர்ந்து சொத்திற்காக தனது தாயை எரித்துக் கொலை செய்தது வாக்கு மூலத்தில் தெரியவந்தது.

வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆறுமுகம் அவரது மனைவி பிரியா

அதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நீதிபதி குணசேகரன் தீர்ப்பு அளித்தார். அதில் ஆறுமுகம், பிரியா மீது கொலைக் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா இரண்டாயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் குற்றச்செய்திகளை படிக்க :

மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்திய தாயை கொலை செய்த மகள்!

சாதி மறுப்புத் திருமணம்: இளைஞர் வெட்டிக் கொலை

Intro:வேலூர் மாவட்டம்

சொத்தைப் பிரித்துக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மகன் மற்றும் மருமகள் ஆயுள் தண்டனை - வேலூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவுBody:வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பள்ளிகுப்பம் கீழ் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் இவரது மனைவி ராணி(60) இவர்களுக்கு ஆறுமுகம் (34) என்ற மகனும் ஆனந்தி, பொன்னியம்மாள் ஆகிய 2 மகள்களும் உள்ளனர் இதில் ஆறுமுகத்துக்கு பிரியா என்பவருடன் திருமணம் ஆகி அவர் மனைவியுடன் வசித்து வருகிறார். அதே போல் ஆனந்தி மற்றும் பொன்னியம்மாள் ஆகியோருக்கும் வேலாயுதம் திருமணம் செய்து கொடுத்துள்ளார் இந்த சூழ்நிலையில் வேலாயுதம் சில ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தார் வேலாயுதத்துக்கு 7 ஏக்கர் நிலம் ஒரு அரிசி ஆலை என மொத்தம் ரூ 10 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன எனவே சொத்துக்கள் அனைத்தையும் தனது பெயருக்கு எழுதி தரும்படி தனது தாய் ராணியிடம் ஆறுமுகம் கேட்டுள்ளார் அதற்கு ராணி உனக்கு மட்டும் கொடுக்க முடியாது உனது சகோதரிகளுக்கும் சேர்த்துதான் சொத்தை பிரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இதுதொடர்பாக ராணிக்கும் ஆறுமுகத்துக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது இந்த சூழ்நிலையில் கடந்த 25.07 2017 அன்று ராணி தனது விவசாய நிலத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார் அப்போது அங்கு சென்று ஆறுமுகம் மற்றும அவரது பிரியா இருவரும் அங்கு சென்று சொத்தை எழுதி தரும்படி மீண்டும் ராணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர் அதற்கு ராணி மறுத்ததால் ஆத்திரத்தில் மாடு கட்டும் கயிறை கொண்டு ராணியை ஆறுமுகம் மற்று பிரியா அடித்துள்ளனர் பின்னர் வீட்டிற்கு வரவழைத்து தலையணையை கொண்டு ராணியின் முகத்தில் அமுக்கி இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து கொலையை மறைப்பதற்காக ராணியின் உடலை விவசாய நிலத்திற்கு எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளனர் இதற்கிடையில் தனது தாயை காணவில்லை என்று ராணியின் மூத்த மகள் ஆனந்தி காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் ஆறுமுகம் தான் தனது மனைவியுடன் சேர்ந்து சொத்திற்காக தனது தாயை எரித்துக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து ஆறுமுகம் மற்றும் பிரியாவை போலீசார் கைது செய்தனர் இந்த வழக்கு வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று நீதிபதி குணசேகரன் தீர்ப்பு அளித்தார். ஆறுமுகம் மற்றும் பிரியா மீது கொலைக் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 2,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.