ETV Bharat / city

பொது மக்களை ஏமாற்றும் மத்திய அரசு - எஸ்.ஆர்.எம். யூ. கண்ணையா - kannaiah srmu

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் எஸ்.ஆர்.எம்.யூ நடத்திய பொதுக்கூட்டத்தில், அதன் தலைவர் கண்ணையா மத்திய அரசை கண்டித்துப் பேசினார்.

Vellore Jolarpet SRMU meeting
author img

By

Published : Sep 19, 2019, 11:55 PM IST

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே, SRMU - தென்னிந்திய ரயில்வே பணியாளர்கள் அமைப்பின் பொதுச்செயலாளரும், AIRF (All India Railwaymen's Federation) இன் நிர்வாகத் தலைவருமான கண்ணையா தலைமையில் ரயில்வேயைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும், மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையையும், அதற்குத் துணைபோகும் நிர்வாகத்தின் போக்கையும் விளக்கி விளக்கக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜோலார்பேட்டை மற்றும் ஆம்பூர் பகுதிகளிலுள்ள ரயில்வேத் துறை சார்ந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் கண்ணையா பேசியதாவது:

Vellore Jolarpet SRMU meeting

100 நாட்கள் திட்டம் என்ற அடிப்படையில், ரயில்வேத் துறையை தனியாரிடம் விடவேண்டும் என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இத்துறையில் சுமார் 1,28,000 கோடி ரூபாய் வரை வருவாய் வருகிறது. அனைத்துத் துறைசார்ந்த செலவுகளைக் கழித்தாலும், சுமார் 68,000 கோடி ரூபாய் லாபத்தில் இத்துறை இயங்குகிறது. தற்போது இத்துறை தனியார் மயமாக்கப்படட்டால், ரயில் பயணச்சீட்டுகள் அனைத்தும் தற்போதைய தொகையைவிட, பலமடங்கு உயர்ந்துவிடும்.

குறிப்பாக, சென்னையிலிருந்து கோயம்புத்தூர்வரை செல்லும் பயணச்சீட்டு தொகை 835 ரூபாயாக உள்ளது, வயதானவர்களுக்கு 535 ரூபாயாக உள்ளது. இதுவே தனியார்வசம் சென்றால் 2,000 ரூபாயாக உயர்ந்து, பொதுமக்கள் பயணம்செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும். தற்போது நடைமுறைபடுத்தப்பட இருக்கும் தனியார் மயமாக்குதலால், இரண்டு வயது குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை அனைவருக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்படும். இவ்வாறு, மத்திய அரசு பொதுமக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

மத்திய அரசின் ஏமாற்று வேலையில் சிக்கிக்கொள்ளாமல், மத்திய அரசுக்கு பொதுமக்களாகிய நீங்கள் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும். தனியார் மயமாக்குதலை மத்திய அரசு கைவிடவில்லையென்றால், பொதுமக்களைத் திரட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் பேசினார்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே, SRMU - தென்னிந்திய ரயில்வே பணியாளர்கள் அமைப்பின் பொதுச்செயலாளரும், AIRF (All India Railwaymen's Federation) இன் நிர்வாகத் தலைவருமான கண்ணையா தலைமையில் ரயில்வேயைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும், மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையையும், அதற்குத் துணைபோகும் நிர்வாகத்தின் போக்கையும் விளக்கி விளக்கக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜோலார்பேட்டை மற்றும் ஆம்பூர் பகுதிகளிலுள்ள ரயில்வேத் துறை சார்ந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் கண்ணையா பேசியதாவது:

Vellore Jolarpet SRMU meeting

100 நாட்கள் திட்டம் என்ற அடிப்படையில், ரயில்வேத் துறையை தனியாரிடம் விடவேண்டும் என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இத்துறையில் சுமார் 1,28,000 கோடி ரூபாய் வரை வருவாய் வருகிறது. அனைத்துத் துறைசார்ந்த செலவுகளைக் கழித்தாலும், சுமார் 68,000 கோடி ரூபாய் லாபத்தில் இத்துறை இயங்குகிறது. தற்போது இத்துறை தனியார் மயமாக்கப்படட்டால், ரயில் பயணச்சீட்டுகள் அனைத்தும் தற்போதைய தொகையைவிட, பலமடங்கு உயர்ந்துவிடும்.

குறிப்பாக, சென்னையிலிருந்து கோயம்புத்தூர்வரை செல்லும் பயணச்சீட்டு தொகை 835 ரூபாயாக உள்ளது, வயதானவர்களுக்கு 535 ரூபாயாக உள்ளது. இதுவே தனியார்வசம் சென்றால் 2,000 ரூபாயாக உயர்ந்து, பொதுமக்கள் பயணம்செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும். தற்போது நடைமுறைபடுத்தப்பட இருக்கும் தனியார் மயமாக்குதலால், இரண்டு வயது குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை அனைவருக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்படும். இவ்வாறு, மத்திய அரசு பொதுமக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

மத்திய அரசின் ஏமாற்று வேலையில் சிக்கிக்கொள்ளாமல், மத்திய அரசுக்கு பொதுமக்களாகிய நீங்கள் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும். தனியார் மயமாக்குதலை மத்திய அரசு கைவிடவில்லையென்றால், பொதுமக்களைத் திரட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் பேசினார்.

Intro:Body:மத்திய அரசு பொது மக்களை ஏமாற்றும் வேலாயில் ஈடுபட்டுள்ளது ஜோலார்பேட்டையில் SRMUவின் பொதுச் செயலாளர் கண்ணையா விளக்கக் கூட்டத்தில் குற்றச்சாட்டு!


வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே SRMUவின் பொதுச் செயலாளர் மற்றும் AIRFன் நிர்வாக தலைவர் கண்ணையா தலைமையில் ரயில்வேயை தனியார் மயமாக்க முயற்சி மேற்கொள்ளும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையையும் அதற்கு துணைபோகும் நிர்வாகத்தின் போக்கையும் விளக்கி விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜோலையார்பேட்டை மற்றும் ஆம்பூர் பகுதிகளில் இருந்து ரயில்வே துறை சார்ந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய SRMU பொதுச்செயலாளர் கண்ணையா;

100 நாள் திட்டம் என்ற அடிப்படையில் ரயில்வே துறை தனியாரிடம் விட வேண்டும் என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இத் துறையில் சுமார் ஒரு லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் வருகிறது. அனைத்து துறை சார்ந்த செலவுகளை கழித்தாலும் சுமார் 68,000 கோடி ரூபாய் லாபத்தில் இத்துறை இயங்குகிறது.
தற்போது இத்துறை தனியார் மயமாக்கப்பட்டல் அனைத்து ரயில் பயணச்சீட்டுகள் தற்போதைய தொகையை விட பல மடங்கு உயர்ந்து விடும் குறிப்பாக சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் பயணச் சீட்டு தொகை 835 ரூபாயாக உள்ளது வயதானவருக்கு 535 ரூபாயாக உள்ளது இதனை தனியார் வசம் சென்றால் 2,000 ரூபாயாக உயர்ந்து பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும். தற்போது நடைமுறை படுத்த இருக்கும் தனியார் மயமாக்குதலால் சிறிய 2வயது குழந்தைகள் முதல் வயதானவர் வரை கட்டணம் வசூலிக்கப்படும். முக்கியமாக தற்போது பொது மக்களை ஏமாற்றும் வேலையாக 25 லட்சம் ரூபாய் இலவச இன்ஷூரன்ஸ் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இதற்கு முன்னதாகவே 20 லட்ச ரூபாய் வண்டியில் பயணம் செய்து இறந்தால் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு இருந்தாலும் தற்போது அது 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு பொதுமக்களை ஏமாற்றும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளது. என குற்றம் சாட்டினார். அதுமட்டுமின்றி மத்திய அரசின் ஏமாற்று வேலையில் சிக்கிக்கொள்ளாமல் மத்திய அரசுக்கு பொதுமக்களாகிய நீங்கள் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தார் தனியார் மயமாக்குதலை மத்திய அரசு கைவிட வேண்டும் அல்லது பொதுமக்களை திரட்டி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.