அண்மை காலமாக தமிழ்நாட்டில் உள்ள ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சிகளில் பிரியாணி செய்து விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துவருகின்றன. இதனால் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆங்காங்கே சோதனைகளிலும் ஈடுபட்டு இறைச்சிகளை பறிமுதல் செய்துவருகின்றனர்.
இப்படிப்பட்ட புகார்களின் அடிப்படையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் இன்று (செப்.20) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.