ETV Bharat / city

முகாம் சிறையில் வெளிநாட்டினர் தற்கொலை முயற்சி

author img

By

Published : Nov 8, 2019, 12:25 PM IST

திருச்சி: முகாம் சிறையில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர் 20 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் சிறை உள்ளது. கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் தங்கியவர்கள் கைது செய்யப்பட்டு இந்த முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இங்கு அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 38 பேர் மற்றும் வங்கதேசத்தினர், பல்கேரியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 70 பேர் நேற்று முதல் பட்டினிப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

சட்டவிரோதமாக கைது செய்து, சிறப்பு முகாம் என்னும் சிறையில் அடைத்திருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், தங்களுக்கு பிணை கிடைத்தும் விடுவிக்க மறுக்கிறார்கள் எனவே எங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டினர் 20 பேர் திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறைத் துறை அலுவலர்கள் அவர்களை மீட்டு உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மற்ற கைதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் சிறை உள்ளது. கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் தங்கியவர்கள் கைது செய்யப்பட்டு இந்த முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இங்கு அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 38 பேர் மற்றும் வங்கதேசத்தினர், பல்கேரியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 70 பேர் நேற்று முதல் பட்டினிப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

சட்டவிரோதமாக கைது செய்து, சிறப்பு முகாம் என்னும் சிறையில் அடைத்திருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், தங்களுக்கு பிணை கிடைத்தும் விடுவிக்க மறுக்கிறார்கள் எனவே எங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டினர் 20 பேர் திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறைத் துறை அலுவலர்கள் அவர்களை மீட்டு உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மற்ற கைதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Intro:திருச்சி முகாம் சிறையில் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர் 20 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Body:திருச்சி:
திருச்சி முகாம் சிறையில் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டினர் 20 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் சிறை உள்ளது. பாஸ்போர்ட் உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியவர்கள் கைது செய்யப்பட்டு இந்த முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வகையில் இங்கு அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 38 பேர் மற்றும் வங்கதேசத்தினர், பல்கேரியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 70 பேர் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

சட்ட விரோதமாக கைது செய்து, சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜாமீன் கிடைத்தும் விடுவிக்க மறுக்குகிறார்கள். எங்களை பார்க்காமல் குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள். எனவே தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டினர் நிலையில் 20 பேர் திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறைத்துறை அதிகாரிகள் அவர்களை மீட்டு உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள கைதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறை வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.