ETV Bharat / city

ரூ.10 ஆயிரம் வழங்கிய ஆணையர், திமுக விருது - யார் இந்த ஆட்டோ ஓட்டுநர்?

author img

By

Published : Sep 12, 2019, 9:25 AM IST

திருச்சி: ஏடிஎம் மையத்தில் வைக்கச் சென்ற பணத்தை கொள்ளையடித்து தன் ஆட்டோவில் பயணித்த கொள்ளையனை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த பெரம்பலூர் ஆட்டோ ஓட்டுநருக்கு திமுக சார்பில் ’சிறந்த ஆட்டோ ஒட்டுநர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுநர் முருகையன்

பெரம்பலூர் மாவட்டம் புதிய மதனகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முருகையன் (48). இவருக்கு இரண்டு ஆண், ஒரு பெண் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். வாடகை ஆட்டோ எடுத்து ஓட்டிவரும் இவர், மிகவும் ஏழ்மையான சூழலிலேயே தன் குடும்பத்தை நடத்திவந்துள்ளார். இந்நிலையில், இவர் தனது ஆட்டோவில் பயணித்த பயணி மீது சந்தேகமடைந்து, அந்தப் பயணியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவல் துறையினரின் விசாரணையில், அந்நபர் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 16 லட்சத்தை கொள்ளையடித்த திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் முருகையன்
ஆட்டோ ஓட்டுநர் முருகையன்

இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் முருகையாவின் நற்செயலை பாராட்டி திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ், 10 ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டி கெளரவித்தார். மேலும், ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் பணியாளர் சங்கத்தினரும் ரூ.5 ஆயிரம் வழங்கி கெளரவித்தனர்.

திமுகவின் அறிக்கை
திமுகவின் அறிக்கை

இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் முருகையாவை பாராட்டி வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி திருவண்ணாமலையில் திமுக சார்பில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழாவில் ’சிறந்த ஆட்டோ ஓட்டுநர்’ விருதும், பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் புதிய மதனகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முருகையன் (48). இவருக்கு இரண்டு ஆண், ஒரு பெண் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். வாடகை ஆட்டோ எடுத்து ஓட்டிவரும் இவர், மிகவும் ஏழ்மையான சூழலிலேயே தன் குடும்பத்தை நடத்திவந்துள்ளார். இந்நிலையில், இவர் தனது ஆட்டோவில் பயணித்த பயணி மீது சந்தேகமடைந்து, அந்தப் பயணியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

காவல் துறையினரின் விசாரணையில், அந்நபர் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 16 லட்சத்தை கொள்ளையடித்த திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் முருகையன்
ஆட்டோ ஓட்டுநர் முருகையன்

இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் முருகையாவின் நற்செயலை பாராட்டி திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ், 10 ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டி கெளரவித்தார். மேலும், ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் பணியாளர் சங்கத்தினரும் ரூ.5 ஆயிரம் வழங்கி கெளரவித்தனர்.

திமுகவின் அறிக்கை
திமுகவின் அறிக்கை

இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் முருகையாவை பாராட்டி வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி திருவண்ணாமலையில் திமுக சார்பில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழாவில் ’சிறந்த ஆட்டோ ஓட்டுநர்’ விருதும், பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளது.

Intro:திருச்சியில் உள்ள ஏடிஎம் மையத்தில் வைக்கச் சென்ற பணத்தையும் . கொள்ளையடித்த கொள்ளையனையும் பிடித்து போலீசில் ஒப்படைத்த பெரம்பலூர் ஆட்டோ ஓட்டுநருக்கு திமுக சார்பில் "சிறந்த ஆட்டோ ஒட்டுநருக்கான " விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.Body:பெரம்பலூர் மாவட்டம் புதிய மதனகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முருகையன் (வயது 48) 2 ஆண் பிள்ளைகள் , 1 பெண் என 3 பிள்ளைகளோடு ஏழ்மையான குடும்பத்தோடு வாடகை ஆட்டோ எடுத்து ஒட்டி வருகிறார். இந்நிலையில் தனது ஆட்டோவில் பயணித்த பயணி மீது சந்தேகமடைந்த ஆட்டோ ஒட்டுநர் பயணியை போலீஸில் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்லப் பட்ட ரூ 16 லட்சத்தை கொள்ளையடித்த திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் கொள்ளையன் ஸ்டீபனை கைது செய்து போலீசார் Uணத்தை பறி முதல் செய்தனர். இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் முருகையாவின் செயலை பாராட்டி திருச்சி மாநகர கமிஷனர் அமல்ராஜ் ரூ 10 ஆயிரம் வழங்கி பாராட்டி கெளரவித்தார். மேலும் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் பணியாளர் சங்கத்தினர் ரூ 5 ஆயிரம் வழங்கி கெளரவித்தனர்.
இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் முருகையா வை பாராட்டி வருகிற செப் - 15-ந் தேதி திருவண்ணாமலையில் தி.மு.க சார்பில் நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழாவில் "சிறந்த ஆட்டோ ஓட்டுநருக்கான விருதும் ." பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளது. Conclusion:ஆட்டோ ஒட்டுநர் முருகையாவிற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் விருது வழங்கி கெளரவிக்க உள்ளார். விருது வழங்கப்படும் முருகையாவிற்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.