ETV Bharat / city

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா: ஐ.ஜி., மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

author img

By

Published : Nov 1, 2019, 11:40 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் சூரசம்ஹார விழா முன்னேற்பாடு பணிகளை தென்மண்டல ஐ.ஜி., மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஷ்வரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிமன்யூ, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பக்தர்கள் தங்குமிடங்கள், கடற்கரை பகுதி, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டனர். மேலும், கோயில் வளாகம், புறக்காவல் நிலையம், கடலோர பாதுகாப்பு தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு மீட்புக் குழுவினரின் உபகரணங்களைப் பார்வையிட்டனர்.

நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் தலைமையில் பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா

திருவிழாவில் பாதுகாப்புப் பணிகளில் 3000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் வசதிக்காக 250 பேருந்துகள் தயாராக உள்ளது. கூடுதல் பேருந்துகள் தேவைக்கும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஷ்வரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிமன்யூ, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பக்தர்கள் தங்குமிடங்கள், கடற்கரை பகுதி, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டனர். மேலும், கோயில் வளாகம், புறக்காவல் நிலையம், கடலோர பாதுகாப்பு தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு மீட்புக் குழுவினரின் உபகரணங்களைப் பார்வையிட்டனர்.

நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் தலைமையில் பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா

திருவிழாவில் பாதுகாப்புப் பணிகளில் 3000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் வசதிக்காக 250 பேருந்துகள் தயாராக உள்ளது. கூடுதல் பேருந்துகள் தேவைக்கும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Intro:திருச்செந்தூர் சூரசம்ஹார விழா முன்னேற்பாடு பணிகள் - தென்மண்டல ஐ.ஜி., மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

Body:

தூத்துக்குடி


திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஷ்வரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆகியோர் ஆய்வு செய்தனர்.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஷ்வரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவீண்குமார் அபிமன்யூ, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பக்தர்கள் தங்குமிடங்கள், கடற்கரை பகுதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர். மேலும், கோவில் வளாகம், புறக்காவல் நிலையம், கடலோர பாதுகாப்பு தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினரின் உபரகரணங்களை பார்வையிட்டனர்.

கோவில் வளாக பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடை உரிமையாளர்களிடம் அதனை அகற்றுமாறும், இதனைத்தொடர்ந்து அலுவலர்கள் கண்காணிக்கவும், மீண்டும் பயன்படுத்தும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவில் சூரசம்ஹாரம் நாளை நடைபெறுகிறது. இந்த ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, திருச்செந்தூர் பேரூராட்சி மூலம் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 

நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் பெருமக்கள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவிழாவில் பாதுகாப்பு பணிகளில் 3000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் வசதிக்காக 250 பேருந்துகள் தயாராக உள்ளது. கூடுதல் பேரூந்துகள் தேவைக்கும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயக்கப்படுகிறது. கோவில்வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் 150 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. கார் மற்றும் பேருந்துகள் சுமார் 2000 எண்ணிக்கையில் நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கியமான 4 வழிப்பாதைகளில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து கோவிலுக்கு செல்வதற்க தேவையான அளவு மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. பக்தர்கள் கூடும் முக்கியமான இடங்களில் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியை காணும் வகையில் 9 இடங்களில் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, திருச்செந்தூர் கோயில் செயல் அலுவலர் அம்ரீத், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், உதவி ஆட்சியர்; (பயிற்சி மதுரை) ஜோதிசர்மா, உதவி ஆட்சியர்; (பயிற்சி திருநெல்வேலி) சிவகுருபிரபாகர்,  திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தனப்ரியா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மாகின் அபுபக்கர், இந்து சமய அறநிலையத்துறை உதவி செயற்பொறியாளர் முருகன், திருச்செந்தூர் வட்டாட்சியர் ஞானராஜ் மற்றும் அலுவலர்கள் உடன்இருந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.