ETV Bharat / city

14 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் கொலைக்குப் பழி வாங்கிய தம்பி!

author img

By

Published : Aug 21, 2019, 5:16 PM IST

தூத்துக்குடி: 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தனது அண்ணன் கொலை செய்யப்பட்டதற்காக, தற்போது பழிக்குப்பழி வாங்கிய சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணன் கொலைக்கு பழி வாங்கிய தம்பி!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் சிவா என்ற சிவக்குமார் (வயது 40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருடைய சகோதரன் முத்துக்குமார் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

கொலை செய்யப்பட்ட இடம்
கொலை செய்யப்பட்ட இடம்

கடந்த 2005ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தில் பச்சைபெருமாள் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிவகுமார் முதல் குற்றவாளி என வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக வந்த சிவக்குமாரை அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் சொலை செய்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சிவக்குமாரின் கொலை குறித்து விசாரணை நடத்தினர். இதில் சிவக்குமாரை கொலை செய்தது பச்சைபெருமாளின் தம்பி ராஜேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 10 பேர் என்பது தெரியவந்தது.

கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த காவல்துறையினர்

பழிக்குப்பழி வாங்கும் சம்பவமாக நடைபெற்ற இந்த கொலை குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை பற்றி துப்பு துலக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் சிவா என்ற சிவக்குமார் (வயது 40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருடைய சகோதரன் முத்துக்குமார் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

கொலை செய்யப்பட்ட இடம்
கொலை செய்யப்பட்ட இடம்

கடந்த 2005ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தில் பச்சைபெருமாள் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிவகுமார் முதல் குற்றவாளி என வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக வந்த சிவக்குமாரை அடையாளம் தெரியாத 10 பேர் கொண்ட கும்பல் சொலை செய்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சிவக்குமாரின் கொலை குறித்து விசாரணை நடத்தினர். இதில் சிவக்குமாரை கொலை செய்தது பச்சைபெருமாளின் தம்பி ராஜேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 10 பேர் என்பது தெரியவந்தது.

கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த காவல்துறையினர்

பழிக்குப்பழி வாங்கும் சம்பவமாக நடைபெற்ற இந்த கொலை குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை பற்றி துப்பு துலக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Intro:தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கழுத்து அறுத்து கொலை.
Body:
தூத்துக்குடி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் பச்சைக்கண்ணன். இவருடைய மகன் சிவா என்ற சிவக்குமார் (வயது 40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவருடைய சகோதரன் முத்துக்குமார். தூத்துக்குடி நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தில் பச்சைபெருமாள் என்ற ஆத்திபழம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிவகுமார் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக சிவகுமார் காரில் தூத்துக்குடிக்கு வந்தார். அவர், காரை கோர்ட்டுக்கு அருகே நிறுத்திவிட்டு நடந்து செல்லும்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 10 பேர் கொண்ட குழுவினர் சிவகுமாரை திடீரென வழிமறித்து கத்தி மற்றும் வெட்டரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தூத்துக்குடி மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த இடத்திற்கு மிக அருகிலேயே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம், நீதிமன்ற வளாகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சிவக்குமாரின் கொலை குறித்து விசாரணை நடத்தினர். இதில் சிவகுமாரை கொலை செய்தது பச்சைபெருமாளின் தம்பி ராஜேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 10 பேர் என்பது தெரியவந்தது.

பழிக்குப்பழி வாங்கும் சம்பவமாக நடைபெற்ற இந்த கொலை குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை பற்றி துப்பு துலக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.