ETV Bharat / city

கப்பல் படகு மீது மோதி விபத்து; தூத்துக்குடி மீனவரை மீட்டுத் தரக்கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

author img

By

Published : Apr 15, 2021, 10:39 PM IST

Updated : Apr 15, 2021, 10:57 PM IST

மீன்பிடித்து கொண்டிருந்த படகு மீது சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதி மாயமான தூத்துக்குடி மீனவரை மீட்டுத் தரக்கோரி அவரின் குடும்பத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் இன்று (ஏப்.15) மனு அளித்தனர்.

கப்பல் படகு மீது மோதி விபத்து, மங்களூரில் கப்பல் விபத்து , மணப்பாடு மீனவ கிராமத்தை சேர்ந்த டென்சன்
mangalore-ship-accident-family-requested-to-revive-thoothukudi-fishermen

தூத்துக்குடி: கர்நாடக மாநிலம் மங்களூரு ஆழ்கடல் பகுதியில் சுமார் 60 கடல் மைல் தொலைவில் கேரளாவைச் சேர்ந்த படகில் 7 தமிழ்நாடு மீனவர்களும், 7 மேற்கு வங்க மீனவர்களும் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த சிங்கப்பூரை சேர்ந்த சரக்குக் கப்பல் மோதியதில் படகு மூழ்கி விபத்து ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரையும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுனில் தாஸ் என்பவரையும் உயிரோடு கப்பல் ஊழியர்கள் மீட்டுள்ளனர். மேலும் மூன்று மீனவர்களது உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவ கிராமத்தை சேர்ந்த டென்சன் உள்ளிட்ட 9 மீனவர்கள் மாயமானார்கள். இந்த மீனவர்களை தேடும் பணியை இந்திய கடலோர காவல் படை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது. இந்திய கடலோர காவல் படை கப்பல் மூலமும், ஹெலிகாப்டர் மூலமும் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகிறது.

மாயமான மீனவரை மீட்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு

இதில் கடலில் மாயமான தூத்துக்குடி மீனவர் டென்சன்-ஐ மீட்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும் என டென்சனின் மனைவி ராணி, அவரது இரண்டு மகள்கள் உள்பட மீனவ கிராம மக்கள் கண்ணீர் மல்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

உரிய மீன்பிடி தொழில் இல்லாத காரணத்தால் கேரள மாநிலத்திற்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வந்த டென்சன் தற்போது கடலில் ஏற்பட்ட விபத்தில் மாயமாகியுள்ளார்.

அவரை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி மீனவர் டென்சன் விபத்தில் சிக்கி மாயமாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினார்கள். எனவே விரைவாக மாயமான மீனவர்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: படகு மீது கப்பல் மோதி விபத்து; 2 தமிழ்நாட்டு மீனவர்களின் உடல் குடும்பத்திடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி: கர்நாடக மாநிலம் மங்களூரு ஆழ்கடல் பகுதியில் சுமார் 60 கடல் மைல் தொலைவில் கேரளாவைச் சேர்ந்த படகில் 7 தமிழ்நாடு மீனவர்களும், 7 மேற்கு வங்க மீனவர்களும் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த சிங்கப்பூரை சேர்ந்த சரக்குக் கப்பல் மோதியதில் படகு மூழ்கி விபத்து ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரையும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுனில் தாஸ் என்பவரையும் உயிரோடு கப்பல் ஊழியர்கள் மீட்டுள்ளனர். மேலும் மூன்று மீனவர்களது உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவ கிராமத்தை சேர்ந்த டென்சன் உள்ளிட்ட 9 மீனவர்கள் மாயமானார்கள். இந்த மீனவர்களை தேடும் பணியை இந்திய கடலோர காவல் படை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது. இந்திய கடலோர காவல் படை கப்பல் மூலமும், ஹெலிகாப்டர் மூலமும் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகிறது.

மாயமான மீனவரை மீட்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு

இதில் கடலில் மாயமான தூத்துக்குடி மீனவர் டென்சன்-ஐ மீட்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும் என டென்சனின் மனைவி ராணி, அவரது இரண்டு மகள்கள் உள்பட மீனவ கிராம மக்கள் கண்ணீர் மல்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

உரிய மீன்பிடி தொழில் இல்லாத காரணத்தால் கேரள மாநிலத்திற்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வந்த டென்சன் தற்போது கடலில் ஏற்பட்ட விபத்தில் மாயமாகியுள்ளார்.

அவரை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி மீனவர் டென்சன் விபத்தில் சிக்கி மாயமாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினார்கள். எனவே விரைவாக மாயமான மீனவர்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: படகு மீது கப்பல் மோதி விபத்து; 2 தமிழ்நாட்டு மீனவர்களின் உடல் குடும்பத்திடம் ஒப்படைப்பு

Last Updated : Apr 15, 2021, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.