ETV Bharat / city

வெளிநாட்டு பயணத்தை விமர்சிப்பது சரியல்ல - எடப்பாடி பழனிசாமி

author img

By

Published : Oct 14, 2019, 9:28 AM IST

திருநெல்வேலி: நாங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க சென்ற பயணத்தை ஸ்டாலின் விமர்சிப்பது சரியல்ல என்று நாங்குநேரி இடைதேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

cm edappadi palaniswami

இம்மாதம் 21ஆம் தேதி நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக, காங்கிரஸ் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஸ்டாலின், வைகோ உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் நாங்குநேரி தொகுதியில் விறுவிறுப்பாகப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல் அதிமுக சார்பில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையின் போது முதலமைச்சர் பேசுகையில், “300 கோடி மக்கள் தொகை கொண்ட இரு பெரும் நாட்டுத் தலைவர்கள் மாமல்லபுரத்தில் பேச்சு வார்த்தை நடத்தியது, மாநில சட்ட ஒழுங்கின் நிலைக்கு எடுத்துக்காட்டு.

அதிமுக அரசை ஒரு காலமும் வீழ்த்த முடியாது. ஸ்டாலின் 122 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்று கூறுகின்றார், நான் ஆட்சி அமைக்கும் போதே 122 பேர்தான் இருந்தார்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 124ஆக எண்ணிக்கை கண்டிப்பாக உயரும். 2021ஆம் ஆண்டு 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்.

வேலூர் தேர்தலில் மக்கள் உண்மை நிலையைப் புரிந்து கொண்டனர். ஸ்டாலின் பேச்சை நம்பவில்லை. எனவே, ஆறு தொகுதியில் மூன்றில் அதிமுக கூடுதல் வாக்குகள் பெற்றது. நாங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இங்குக் கொண்டுவருவதற்காகச் சென்றோம். அதனை விமர்சிக்கும் ஸ்டாலின், தான் எதற்காக நான்கு மாதத்திற்கு ஒரு முறை வெளிநாடுகளுக்குச் செல்கின்றார் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்” என்றார்.

இம்மாதம் 21ஆம் தேதி நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக, காங்கிரஸ் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஸ்டாலின், வைகோ உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் நாங்குநேரி தொகுதியில் விறுவிறுப்பாகப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல் அதிமுக சார்பில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையின் போது முதலமைச்சர் பேசுகையில், “300 கோடி மக்கள் தொகை கொண்ட இரு பெரும் நாட்டுத் தலைவர்கள் மாமல்லபுரத்தில் பேச்சு வார்த்தை நடத்தியது, மாநில சட்ட ஒழுங்கின் நிலைக்கு எடுத்துக்காட்டு.

அதிமுக அரசை ஒரு காலமும் வீழ்த்த முடியாது. ஸ்டாலின் 122 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்று கூறுகின்றார், நான் ஆட்சி அமைக்கும் போதே 122 பேர்தான் இருந்தார்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 124ஆக எண்ணிக்கை கண்டிப்பாக உயரும். 2021ஆம் ஆண்டு 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்.

வேலூர் தேர்தலில் மக்கள் உண்மை நிலையைப் புரிந்து கொண்டனர். ஸ்டாலின் பேச்சை நம்பவில்லை. எனவே, ஆறு தொகுதியில் மூன்றில் அதிமுக கூடுதல் வாக்குகள் பெற்றது. நாங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இங்குக் கொண்டுவருவதற்காகச் சென்றோம். அதனை விமர்சிக்கும் ஸ்டாலின், தான் எதற்காக நான்கு மாதத்திற்கு ஒரு முறை வெளிநாடுகளுக்குச் செல்கின்றார் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்” என்றார்.

Intro:நாங்கள் வெளிநாட்டிற்கு முதலீட்டாளர்களை இங்கு கொண்டுவருவதற்காக சென்றோம் அதனை விமர்சிக்கும் ஸ்டாலின் தான் எதற்காக 4 மாதத்திற்கு ஒரு முறை வெளிநாடுகளுக்கு செல்கின்றார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் பேச்சு.Body:நாங்கள் வெளிநாட்டிற்கு முதலீட்டாளர்களை இங்கு கொண்டுவருவதற்காக சென்றோம் அதனை விமர்சிக்கும் ஸ்டாலின் தான் எதற்காக 4 மாதத்திற்கு ஒரு முறை வெளிநாடுகளுக்கு செல்கின்றார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் பேச்சு.

வருகின்ற 21ம் தேதி நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அதிமுக காங்கிரஸ் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஸ்டாலின் வைகோ உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாங்குநேரி தொகுதியில் விறுவிறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதே போல் அதிமுக சார்பில் இன்று நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் பிரச்சாரத்தின் போது அவர் கூறுகையில்,

300 கோடி மக்கள் தொகை கொண்ட இரு பெரும் நாட்டு தலைவர்கள் மாமல்லபுரத்தில் பேச்சு வார்த்தை நடத்தியது தமிழக சட்டம் ஒழுங்கின் நிலைக்கு எடுத்து காட்டுகின்றது.

அதிமுக அரசை ஒரு காலமும் வீழ்த்த முடியாது. ஸ்டாலின் 122 எம்.எல்.ஏக்கள் என்று கூறுகின்றார், நான் ஆட்சி அமைக்கும் போதே 122 பேர் தான் இருந்தார்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 124ஆக எண்ணிக்கை கண்டிப்பாக உயரும். 2021ம் ஆண்டு 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்.

இந்தாண்டு 1800 ஏரிகள் தூர் வாரும் பணிகள் நடைபெறுகிறது படிப்படியாக 40 ஆயிரம் ஏரிகள் தூர் வாரப்படும். நாங்குனேரி தொகுதியில் தேவையான இடங்களில் தடுப்பணை கட்டி தரப்படும், நீர் மேலாண்மை திட்டத்திற்கு எத்தனை ஆயிரம் கோடிகள் வேண்டுமானாலும் செலவழிக்க அரசு தயாராக உள்ளது என்றும்

தாலிக்கு தங்கம் திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை தமிழகம் தான் அதனை செயல்படுத்தி வருகிறது.

வேலூர் தேர்தலில் மக்கள் உண்மை நிலையை புரிந்து கொண்டனர். ஸ்டாலின் பேச்சை நம்பவில்லை எனவே
6 தொகுதியில் 3ல் அதிமுக கூடுதல் வாக்குகள் பெற்றது. நாங்கள் வெளிநாட்டிற்கு முதலீட்டாளர்களை இங்கு கொண்டுவருவதற்காக சென்றோம் அதனை விமர்சிக்கும் ஸ்டாலின் தான் எதற்காக 4 மாதத்திற்கு ஒரு முறை வெளிநாடுகளுக்கு செல்கின்றார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் ஸ்டாலின் சுவிஸ் வங்கியில் கூட பணம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் போட்டவர்கள் பட்டியலை பெற்றுள்ளார் கறுப்பு பணம் கொண்டவர்கள் பட்டியலில் திமுக இடம் பெற்றுள்ளதோ என சந்தேகம் எழுகிறது.


ஆட்சியை கலைக்க ஸ்டாலின் பல வழிகளில் திட்டமிடுகிறார். அது ஒரு போதும் நடக்காது. அவரது கனவு ஒருபோதும் பலிக்காது.
தவறான எண்ணத்தை விட்டுவிட்டு ஆக்க பூர்வமான செயலில் ஈடுபட்டால் அடுத்த முறை எதிர்கட்சி தலைவராக வாவது வர முடியும் என்றும் திமுக வாரிசு அரசியலை கொண்டது. நேற்று கலைஞர் இன்று அவரது மகன் ஸ்டாலின் நாளை உதயநிதி என்று போய்க்கொண்டே இருக்கும் ஆனால் அதிமுகவில் அப்படியில் இல்லை சாதரண தொண்டனும் பதவியை பெற முடியும் அதற்கு நாங்குநேரி வேட்பாளர் நாராயணனும் ஒரு சான்று என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.