திருநெல்வேலி: முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று (மே.14) நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் மிகப்பெரிய பாறை உருண்டு விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.
இதில் 2 லாரிகள், 3 கிட்டாச்சிகள் பள்ளத்தில் மாட்டிக் கொண்டன. லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், கிட்டாச்சி ஆபரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் உள்பட 6 பேர் பள்ளத்தில் மாட்டிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பேட்டை, பாளையங்கோட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனும் விரைந்தார். அவர் தலைமையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.