ETV Bharat / city

டிடிவிக்கு எதிராக அணி திரளும் பெங்களூரு புகழேந்தி கோஷ்டி!

சேலம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிருப்தியாளர்களின் கூட்டம் பெங்களூரு புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

author img

By

Published : Nov 10, 2019, 4:59 PM IST

பெங்களூரு புகழேந்தி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் புகழேந்தி. அவர் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவதாக சில வாரங்களாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. இதனையடுத்து கடந்த வாரம் அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சேலத்தில் உள்ள அவரின் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்துப் பேசினார்.

இதனால் அமமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்ததாக அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் நடந்தன. இது ஒருபுறம் இருக்க, சேலத்தில் இன்று தனியார் நட்சத்திர விடுதியில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அமமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து, சுமார் 200 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தவறு யார் செய்தாலும் தண்டனைதான் - டிடிவி. தினகரன்

இக்கூட்டத்திற்குப் பெங்களூரு புகழேந்தி தலைமை வகித்தார். அமமுகவின் மகளிர் அணியினர், மருத்துவ அணியினர், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினர் எனப் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தினகரன் தலைமையிலான அமமுகவில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர்.

பெங்களூரு புகழேந்தி தலைமையில் நடைபெற்ற அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டம்

ஏற்கனெவே கோவை மண்டல அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிருப்தி ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த தருணத்தில் சேலம் மண்டல அமமுக கூட்டமும் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் புகழேந்தி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் புகழேந்தி. அவர் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவதாக சில வாரங்களாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. இதனையடுத்து கடந்த வாரம் அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சேலத்தில் உள்ள அவரின் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்துப் பேசினார்.

இதனால் அமமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்ததாக அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் நடந்தன. இது ஒருபுறம் இருக்க, சேலத்தில் இன்று தனியார் நட்சத்திர விடுதியில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அமமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து, சுமார் 200 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தவறு யார் செய்தாலும் தண்டனைதான் - டிடிவி. தினகரன்

இக்கூட்டத்திற்குப் பெங்களூரு புகழேந்தி தலைமை வகித்தார். அமமுகவின் மகளிர் அணியினர், மருத்துவ அணியினர், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினர் எனப் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தினகரன் தலைமையிலான அமமுகவில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர்.

பெங்களூரு புகழேந்தி தலைமையில் நடைபெற்ற அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டம்

ஏற்கனெவே கோவை மண்டல அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிருப்தி ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த தருணத்தில் சேலம் மண்டல அமமுக கூட்டமும் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் புகழேந்தி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:சேலத்தில் போட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரின் கூட்டம் பெங்களூரு புகழேந்தி தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது.


Body:அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் புகழேந்தி. அவர் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவதாக சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில் கடந்த வாரம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார் .

இதனையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்ததாக அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் நடந்தன.

இந்த நிலையில் சேலத்தில் இன்று தனியார் நட்சத்திர விடுதியில் சேலம் மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து சுமார் 200 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பெங்களூரு புகழேந்தி தலைமை வகித்தார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணியினர் மருத்துவ அணியினர் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினர் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர்.




Conclusion:ஏற்கனவே கோவை மண்டல போட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனைக் கூட்டம் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது இந்த நிலையில் சேலம் மண்டல அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது விரைவில் புகழேந்தி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவார் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.