சேலம்: தேசிய பெண் குழந்தைகள் தினம், குடியரசு தினங்களை முன்னிட்டு பெண்குழந்தைகள் பாதுகாப்பு, விழிப்புணர்வு குறித்த சிறப்பு நிகழ்வு சேலத்தில் நடைபெற்றது. குழந்தை நேய சேலம் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் வழங்கிய இந்நிகழ்ச்சியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, தற்காப்பு தகவல் குறித்து சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
பப்பட் ஷோ எனப்படும் பொம்மலாட்ட முறையில் இந்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.