ETV Bharat / city

செல்ஃபோன் கடையில் கைவரிசை காட்டிய கணவன், மனைவி கைது! - செல்போனை திருடி சென்ற கணவன் மனைவியை சிசிடிவி காட்சியின் உதவியுடன் காவல் துறையினர் கைது

சேலம்: செல்ஃபோன் கடையில் விலை விசாரித்துவிட்டு செல்ஃபோனை திருடிச் சென்ற கணவன் மனைவியை சிசிடிவி காட்சியின் உதவியுடன் காவல் துறையினர் கைது செய்தனர்.

couples  arrested for stealing cellphone
செல்போன் கடையில் செல்போன் திருடிய கணவன் மனைவி கைது
author img

By

Published : Dec 8, 2019, 10:12 AM IST

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மீனாட்சி மொபைல்ஸ் என்ற செல்ஃபோன் கடையில் கடந்த வாரம் கணவன் மனைவி இருவர் வந்து செல்ஃபோன் விலை விசாரித்துவிட்டு செல்ஃபோனை வாங்காமல் சென்றுவிட்டனர்.

அன்று மாலையில் கடை உரிமையாளர் செல்ஃபோன் எண்ணிக்கையை சரி பார்த்தபோது, கணக்கில் ஒன்று குறைவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் செல்ஃபோன் விலை கேட்பது போல் நடித்து அதனை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் செய்தார்.

இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்ய பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் கந்தவேல் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், அன்பழகன், முரளி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

செல்ஃபோன் கடையில் கைவரிசை... கணவன், மனைவி கைது

இவர்கள் விசாரித்து செல்ஃபோன் திருடிய தாதகாப்பட்டியைச் சேர்ந்த நாகேந்திரன் (வயது 33), அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களிடமிருந்து செல்ஃபோன், இவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திவந்த இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வாகனத்தில் பிரஸ் என்று எழுதப்பட்டும், வழக்கறிஞர் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருந்தது. இது தவிர நாகேந்திரனிடமிருந்து வழக்கறிஞர் என பெயரிட்ட சில விசிட்டிங் கார்டுகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கணவனும் மனைவியும் சேர்ந்து வேறு எங்கெல்லாம் திருடியுள்ளனர் என்றும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மீனாட்சி மொபைல்ஸ் என்ற செல்ஃபோன் கடையில் கடந்த வாரம் கணவன் மனைவி இருவர் வந்து செல்ஃபோன் விலை விசாரித்துவிட்டு செல்ஃபோனை வாங்காமல் சென்றுவிட்டனர்.

அன்று மாலையில் கடை உரிமையாளர் செல்ஃபோன் எண்ணிக்கையை சரி பார்த்தபோது, கணக்கில் ஒன்று குறைவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் செல்ஃபோன் விலை கேட்பது போல் நடித்து அதனை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் செய்தார்.

இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்ய பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் கந்தவேல் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், அன்பழகன், முரளி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

செல்ஃபோன் கடையில் கைவரிசை... கணவன், மனைவி கைது

இவர்கள் விசாரித்து செல்ஃபோன் திருடிய தாதகாப்பட்டியைச் சேர்ந்த நாகேந்திரன் (வயது 33), அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களிடமிருந்து செல்ஃபோன், இவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திவந்த இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வாகனத்தில் பிரஸ் என்று எழுதப்பட்டும், வழக்கறிஞர் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருந்தது. இது தவிர நாகேந்திரனிடமிருந்து வழக்கறிஞர் என பெயரிட்ட சில விசிட்டிங் கார்டுகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கணவனும் மனைவியும் சேர்ந்து வேறு எங்கெல்லாம் திருடியுள்ளனர் என்றும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Intro:சேலத்தின் செல்போன் கடையில் செல்போன் திருடிய கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர்.


Body:சேலம் பள்ளப்பட்டி பகுதியில் புதிய பேருந்து நிலையம் உள்ளது. இங்கு மீனாட்சி மொபைல்ஸ் என்ற செல்போன் கடை உள்ளது. இங்கு கடந்த வாரம் கணவன் மனைவி இருவர் வந்து செல்போன் விலை விசாரித்தனர். பிறகு செல்போனை வாங்காமல் அவர்கள் சென்றுவிட்டனர்.

அன்று மாலையில் கடை உரிமையாளர் செல்போன் எண்ணிக்கையை சரி பார்த்தபோது ஒரு செல்போன் திருடு போய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவை கடை உரிமையாளர் பார்த்தார். அப்போது கணவனும் மனைவியும் செல்போன் விலை கேட்பது போல நடித்து செல்போனை திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் இடம் புகார் செய்தார்.

இதையடுத்து கணவன்-மனைவி கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் கந்தவேல் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், அன்பழகன், முரளி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் விசாரித்து செல்போன் திருடிய தாதகாப்பட்டி யைச் சேர்ந்த நாகேந்திரன் வயது 33 மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி வயது 26 ஆகியோர் கைது செய்தனர்.

பின்னர் இவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் திருட்டுக்கு பயன்படுத்தி வந்த இரண்டு சக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனத்தில் பிரஸ் என்றும இந்த வாகனத்தில் பிரஸ் என்று எழுதப்பட்டும் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. இதுதவிர நாகேந்திரன் இடமிருந்து வழக்கறிஞர் என பெயரிட்ட விசிட்டிங் கார்டுகள் பலவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கணவனும் மனைவியும் சேர்ந்து வேறு எங்காவது திருடி உள்ளனரா என தற்போது விசாரணை நடக்கிறது.


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.