தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கைப் பணி நாளை தொடங்குகிறது. இந்தப் பணிக்காக அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பூத் ஏஜெண்டுகளுக்கும் வேட்பாளர்களுக்கும் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்கான அனுமதிச்சீட்டு வழங்குவதில் குளறுபடி உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
மேலும் அனுமதி சீட்டு வழங்குவதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்படததால், தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் வேட்பாளர்கள் மற்றும் பூத் ஏஜெண்டுகள் மொத்தமாக சென்று முற்றுகையிட்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்பாளர் மற்றும் பூத் ஏஜெண்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: