ETV Bharat / city

அர்ச்சகர் தற்கொலை வழக்கு: உயர் அலுவலர்களை வழக்கில் சேர்க்கக் கோரிய மனு தள்ளுபடி!

author img

By

Published : Mar 20, 2020, 10:28 PM IST

மதுரை: கைலாசநாதர் கோயில் அர்ச்சகர் நாகமுத்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் சம்பவத்தின்போது பணிபுரிந்த காவல் உயர் அலுவலர்களை குற்றவாளிகளாக சேர்க்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

temple priest suicide case hearing in high court madurai bench
temple priest suicide case hearing in high court madurai bench

தேனி மாவட்டம் பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகன் நாகமுத்து, கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயிலில் அர்ச்சகராக பணிபுரிந்தார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உள்பட பலர் மீது தென்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சம்பவத்தின் போது மாவட்ட துணை கண்காணிபாளர்களாக பணிபுரிந்த உமாமகேஸ்வரி, சேது மற்றும் ஆய்வாளர்கள் இளங்கோவன், செல்லப்பாண்டியன் ஆகியோரை குற்றவாளியாக சேர்க்கக் கோரி தற்கொலை செய்து கொண்ட பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இதே கோரிக்கையுடன் ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வேளையில் இம்மனுவின் மீது மீண்டும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், மேலும் மனுதாரர் காலதாமதமாக மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நாகமுத்து தற்கொலை குறித்து நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகன் நாகமுத்து, கைலாசப்பட்டி கைலாசநாதர் கோயிலில் அர்ச்சகராக பணிபுரிந்தார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உள்பட பலர் மீது தென்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சம்பவத்தின் போது மாவட்ட துணை கண்காணிபாளர்களாக பணிபுரிந்த உமாமகேஸ்வரி, சேது மற்றும் ஆய்வாளர்கள் இளங்கோவன், செல்லப்பாண்டியன் ஆகியோரை குற்றவாளியாக சேர்க்கக் கோரி தற்கொலை செய்து கொண்ட பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இதே கோரிக்கையுடன் ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வேளையில் இம்மனுவின் மீது மீண்டும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், மேலும் மனுதாரர் காலதாமதமாக மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நாகமுத்து தற்கொலை குறித்து நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.