ETV Bharat / city

லாரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் - மதுரையில் பரபரப்பு

author img

By

Published : Aug 3, 2022, 7:25 PM IST

மதுரை மார்க்கெட் பகுதியில் லாரியில் ஒருவர் தூக்குப்போட்டு தொங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை

மதுரை: பரவை மார்க்கெட் பகுதியில் தென்மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், அரிசி ஏற்றி வரும் லாரிகள் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து நகர்ப்பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு பொருட்கள் கொண்டு வருவது வழக்கம்.

தென்மாவட்டங்களில் இருந்து வரும் லாரிகள் அங்கு நிறுத்தப்பட்டு அதில் வரும் பணியாளர்கள் அப்பகுதியிலேயே திரும்பிச்செல்லும் வரை தங்கி இருப்பது வழக்கம்.

இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து வந்த லாரியில் வந்த ஈரோட்டைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் இன்று (ஆக.3) லாரியிலேயே கயிறைக் கட்டி தூக்கு போட்டு இறந்துள்ளார். இது குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கூடல்புதூர் காவல் நிலைய காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..
தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

லாரியில் தூக்கிட்டு தற்கொலை

இதையும் படிங்க: நேரு விளையாட்டு அரங்கில் காவலர் தற்கொலை

மதுரை: பரவை மார்க்கெட் பகுதியில் தென்மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், அரிசி ஏற்றி வரும் லாரிகள் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து நகர்ப்பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு பொருட்கள் கொண்டு வருவது வழக்கம்.

தென்மாவட்டங்களில் இருந்து வரும் லாரிகள் அங்கு நிறுத்தப்பட்டு அதில் வரும் பணியாளர்கள் அப்பகுதியிலேயே திரும்பிச்செல்லும் வரை தங்கி இருப்பது வழக்கம்.

இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து வந்த லாரியில் வந்த ஈரோட்டைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் இன்று (ஆக.3) லாரியிலேயே கயிறைக் கட்டி தூக்கு போட்டு இறந்துள்ளார். இது குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கூடல்புதூர் காவல் நிலைய காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..
தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

லாரியில் தூக்கிட்டு தற்கொலை

இதையும் படிங்க: நேரு விளையாட்டு அரங்கில் காவலர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.