ETV Bharat / city

சேலம் அரசு மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு - Parliamentarian Study

சேலம்: மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு
author img

By

Published : Sep 23, 2019, 4:27 PM IST

Updated : Sep 24, 2019, 12:35 PM IST

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதார வசதிகள் முற்றிலும் இல்லாததை அறிந்து மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டனர்.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதி மாவட்டங்களில் இருந்து தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி அந்தஸ்தில் இருப்பதால் நோயாளிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய அடிப்படை வசதிகள் மருத்துவமனையில் இல்லாததால் நோயாளிகளிடம் இருந்து அதிகமான புகார்கள் வந்த நிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

சேலம் அரசு மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு
  • இந்த ஆய்வை முடித்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சேலம் மருத்துவமனை ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் மிக முக்கிய பங்காற்றி வரும் நிலையில் கழிவறை, குடிநீர், நோயாளிகளின் படுக்கை வசதி, நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர், செவிலியரின் எண்ணிக்கை இவை அனைத்திலும் குறைபாடு உள்ளது. அதிமுக அரசாங்கம் சுகாதாரத்துறையில் கூடுதல் கவனம் எடுத்து மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளியிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: நோயாளிகளை கண்காணிக்கும் புதிய ஆடை கண்டுபிடிப்பு - மாணவிகள் சாதனை

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதார வசதிகள் முற்றிலும் இல்லாததை அறிந்து மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டனர்.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதி மாவட்டங்களில் இருந்து தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி அந்தஸ்தில் இருப்பதால் நோயாளிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய அடிப்படை வசதிகள் மருத்துவமனையில் இல்லாததால் நோயாளிகளிடம் இருந்து அதிகமான புகார்கள் வந்த நிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

சேலம் அரசு மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு
  • இந்த ஆய்வை முடித்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சேலம் மருத்துவமனை ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் மிக முக்கிய பங்காற்றி வரும் நிலையில் கழிவறை, குடிநீர், நோயாளிகளின் படுக்கை வசதி, நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர், செவிலியரின் எண்ணிக்கை இவை அனைத்திலும் குறைபாடு உள்ளது. அதிமுக அரசாங்கம் சுகாதாரத்துறையில் கூடுதல் கவனம் எடுத்து மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளியிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: நோயாளிகளை கண்காணிக்கும் புதிய ஆடை கண்டுபிடிப்பு - மாணவிகள் சாதனை

Intro:சேலம் அரசு மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்களும் நோயாளிகளாக மாறும் அவலம். சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையில் ஆய்வு.


Body:சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் மற்றும் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்தனர்.

இதில் சுகாதார வசதிகள் முற்றிலும் இல்லாததை அறிந்து மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதி மாவட்டங்களில் இருந்து தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி அந்தஸ்தில் இருப்பதால் நோயாளிகளின் வருகை எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வண்ணம் உள்ளது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய அடிப்படை வசதிகள் மருத்துவமனையில் இல்லாததால் நோயாளிகளிடம் இருந்து அதிகமான புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்வு முடித்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும்போது சேலம் மருத்துவமனை ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதார தேவைகள் மிக முக்கிய பங்காற்றி வரும் நிலையில் கழிவறை குடிநீர் நோயாளிகளின் படுக்கை வசதி நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர் மற்றும் செவிலியரின் எண்ணிக்கை இவை அனைத்திலும் குறைபாடு உள்ளது எனவும் அதிமுக அரசாங்கம் சுகாதாரத்துறை கூடுதல் கவனம் எடுத்து மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளியிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். எனவும் அறிவுறுத்தப்பட்ட தாக தெரிவித்தார் மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மருத்துவர்கள் மருத்துவமனைக்கு கேட்கும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் எஸ் ஆர் பார்த்திபன் எம்பி தெரிவித்தார்.


Conclusion:
Last Updated : Sep 24, 2019, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.