ETV Bharat / city

பொதுமக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்தக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

author img

By

Published : Feb 26, 2021, 11:14 AM IST

பொதுமக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்தக் கோரிய வழக்கில், அதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்து, வழக்கை எட்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

பொதுமக்களுக்கு எப்போது கொரோனா தடுப்பு மருந்து
பொதுமக்களுக்கு எப்போது கொரோனா தடுப்பு மருந்து

மதுரை: பொதுமக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்தக் கோரிய வழக்கில், அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக 1.5 லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தற்போது உருமாறிய கரோனா நோய்த்தொற்று இந்தியா முழுவதும் பரவிவருகிறது. கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது மத்திய அரசு உத்தரவின்பேரில் முதல்நிலைப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டில் 135 தனியார் மருத்துவமனைகளுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசிக்கு அரசு விலை நிர்ணயம் செய்யவில்லை. இதனால், ஏழை எளிய மக்கள் பயன்பெற முடியாத நிலை உள்ளது. அரசுத் தரப்பில் இலவசமாகப் போடப்படும் கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு தற்போது வரை போடப்படவில்லை.

இது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கரோனா தடுப்பூசி போடுவதன் மூலம் ஏழை எளிய மக்கள் பலர் பயன்பெற முடியும். இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

எனவே, போர்க்கால அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யவும், தனியார் மருத்துவமனையில் போடப்படும் கரோனா தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்து உத்தரவிடவும் வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தற்போது கரோனா தடுப்பூசி குறித்து நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

மதுரை: பொதுமக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்தக் கோரிய வழக்கில், அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக 1.5 லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தற்போது உருமாறிய கரோனா நோய்த்தொற்று இந்தியா முழுவதும் பரவிவருகிறது. கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது மத்திய அரசு உத்தரவின்பேரில் முதல்நிலைப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டில் 135 தனியார் மருத்துவமனைகளுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசிக்கு அரசு விலை நிர்ணயம் செய்யவில்லை. இதனால், ஏழை எளிய மக்கள் பயன்பெற முடியாத நிலை உள்ளது. அரசுத் தரப்பில் இலவசமாகப் போடப்படும் கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு தற்போது வரை போடப்படவில்லை.

இது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கரோனா தடுப்பூசி போடுவதன் மூலம் ஏழை எளிய மக்கள் பலர் பயன்பெற முடியும். இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

எனவே, போர்க்கால அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யவும், தனியார் மருத்துவமனையில் போடப்படும் கரோனா தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்து உத்தரவிடவும் வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தற்போது கரோனா தடுப்பூசி குறித்து நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.