ETV Bharat / city

நில அபகரிப்பு வழக்கு - மு.க. அழகிரி பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Apr 17, 2021, 6:00 PM IST

மதுரை: நில அபகரிப்பு வழக்கில் மு.க. அழகிரி தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நில அபகரிப்பு வழக்கில் மு.க. அழகிரி தரப்பில் பதிலளிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
நில அபகரிப்பு வழக்கில் மு.க. அழகிரி தரப்பில் பதிலளிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தனது அறக்கட்டளை மூலம் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பகுதியில் தயா பொறியியல் கல்லூரியை கட்டினார்.

நில அபகரிப்பு வழக்கு

இதற்காக அப்பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக வந்த புகாரின்பேரில், நில அபகரிப்பு பிரிவு காவல் துறையினர், மு.க. அழகிரிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை மதுரையில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கின் 465, 468, 471 ஆகிய பிரிவுகள் பொருந்தாது என உத்தரவிட்டது.

மு.க. அழகிரி தரப்பில் பதிலளிக்க வேண்டும்

இந்த உத்தரவை எதிர்த்து, அரசுத்தரப்பு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது.

அழகிரியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று (ஏப். 17) விசாரித்த நீதிபதி கிருஷ்ணவள்ளி, மு.க. அழகிரி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: 'விவேக்கின் மரணம் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும்!'

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தனது அறக்கட்டளை மூலம் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பகுதியில் தயா பொறியியல் கல்லூரியை கட்டினார்.

நில அபகரிப்பு வழக்கு

இதற்காக அப்பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 44 சென்ட் நிலத்தை அபகரித்ததாக வந்த புகாரின்பேரில், நில அபகரிப்பு பிரிவு காவல் துறையினர், மு.க. அழகிரிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை மதுரையில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கின் 465, 468, 471 ஆகிய பிரிவுகள் பொருந்தாது என உத்தரவிட்டது.

மு.க. அழகிரி தரப்பில் பதிலளிக்க வேண்டும்

இந்த உத்தரவை எதிர்த்து, அரசுத்தரப்பு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது.

அழகிரியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று (ஏப். 17) விசாரித்த நீதிபதி கிருஷ்ணவள்ளி, மு.க. அழகிரி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: 'விவேக்கின் மரணம் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.