ETV Bharat / city

நான்கு மீனவர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் - மத்திய உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Feb 4, 2021, 6:18 PM IST

மதுரை: இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களுக்கு இலங்கை அரசு உரிய நிவாரணம் வழங்கவும், கொலை செய்த இலங்கை கப்பல் படையினரை கைது செய்ய கோரிய வழக்கு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்த்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

issue on four fisherman killed by srilanka navy
மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கைது செய்வது, கொலை செய்வது, படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவது, துப்பாக்கி முனையில் மீனவர்களை கடத்துவது, சட்டவிரோதமாக சிறையில் அடைப்பது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.

30 ஆண்டுகளாக இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், இலங்கை அரசுக்கும் போர் நடைபெற்று வந்தது. 2009ஆம் ஆண்டு இலங்கை அரசிடம் சரணடைந்த ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்களை இலங்கை அரசு சட்டவிரோதமாக கொன்று குவித்தது.

பல நூறு ஆண்டுகளாக கச்சதீவு தமிழ் மன்னர்களின் கையில் இருந்தது. அதன் பின்பு பிரிட்டிஷ் அரசாங்கத்திடமும், இந்திய அரசாங்கத்திடமும் இருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கச்சத்தீவு குறித்து ஒப்பந்தமும் போடப்படவில்லை. இந்தியா - இலங்கை இரண்டு நாடுகளும் எல்லைகளை மட்டுமே அப்பகுதியில் பிரித்துக் கொண்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்து 500 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மனித உரிமை ஆணையத்தில் முதல் கோட்பாடு, மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே. ஆனால் ஐநா மனித உரிமை ஆணையம் இது குறித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு முடிவும் தற்போதுவரை எட்டப்படவில்லை.

2013, மே 3ஆம் தேதி தமிழ்நாடு அரசு இந்திய மீனவர்களை காப்பாற்றுவதற்காக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் மத்திய அரசு தற்போது வரை அதுதொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் தற்போது வரை இலங்கை சிறைச்சாலையில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு சரியான உணவு, தண்ணீர் கிடைப்பதில்லை. தமிழ்நாடு மீனவர்கள் குறித்து மத்திய அரசு எந்த ஒரு கவனமும் கொள்ளவில்லை.

சமீபத்தில் கேரளா எல்லைக்குள் இத்தாலி கப்பல் நுழைந்து கேரளா மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றனர். உடனடியாக இந்திய அரசு இரண்டு இத்தாலிய மாலுமிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தமிழ்நாடு மீனவர்கள் ஆயிரத்து 500 நபர்களை இலங்கை கப்பல் படையினர் கொலை செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இந்திய அரசு எடுக்கவில்லை. இந்திய அரசு இலங்கையை நட்பு நாடாக கருதுகிறது. இந்திய அரசு வலிமையான முடிவு எடுக்காததால் இலங்கை அரசு மனித உரிமை மீறலை மேற்கொண்டு வருகிறது.

இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை கைது செய்வதும், அதன் பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும் பின்பு இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களின் பொருள்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவர்களை மட்டும் விடுதலை செய்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

2021 ஜனவரி 18ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக வாடகை படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்ற மெசியா, நாகராஜ், செந்தில் குமரன், சாம்சந்தவின் ஆகிய 4 நபர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து துன்புறுத்தி கொலை செய்து கடலில் வீசியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட 4 மீனவர்களுக்கு இலங்கை அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கொலை செய்த இலங்கை கடற்படையை சேர்ந்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனு அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் தற்போதுவரை மேற்கொள்ளவில்லை.

எனவே 4 இந்திய மீனவர்களை கொலை செய்த இலங்கை கப்பல் படையை சேர்ந்த நபர்களை கைது செய்யவும், இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கும் இலங்கை அரசு நிவாரணம் வழங்கவும், மீனவர்களையும் அவர்களது உடைமைகளையும் காப்பாற்றுவதற்கு முறையான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்த்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தனி அலுவலர்கள் பதவிக்கால நீட்டிப்பு மசோதா தாக்கல்!

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கைது செய்வது, கொலை செய்வது, படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவது, துப்பாக்கி முனையில் மீனவர்களை கடத்துவது, சட்டவிரோதமாக சிறையில் அடைப்பது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.

30 ஆண்டுகளாக இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், இலங்கை அரசுக்கும் போர் நடைபெற்று வந்தது. 2009ஆம் ஆண்டு இலங்கை அரசிடம் சரணடைந்த ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்களை இலங்கை அரசு சட்டவிரோதமாக கொன்று குவித்தது.

பல நூறு ஆண்டுகளாக கச்சதீவு தமிழ் மன்னர்களின் கையில் இருந்தது. அதன் பின்பு பிரிட்டிஷ் அரசாங்கத்திடமும், இந்திய அரசாங்கத்திடமும் இருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கச்சத்தீவு குறித்து ஒப்பந்தமும் போடப்படவில்லை. இந்தியா - இலங்கை இரண்டு நாடுகளும் எல்லைகளை மட்டுமே அப்பகுதியில் பிரித்துக் கொண்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்து 500 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மனித உரிமை ஆணையத்தில் முதல் கோட்பாடு, மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே. ஆனால் ஐநா மனித உரிமை ஆணையம் இது குறித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு முடிவும் தற்போதுவரை எட்டப்படவில்லை.

2013, மே 3ஆம் தேதி தமிழ்நாடு அரசு இந்திய மீனவர்களை காப்பாற்றுவதற்காக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் மத்திய அரசு தற்போது வரை அதுதொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் தற்போது வரை இலங்கை சிறைச்சாலையில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு சரியான உணவு, தண்ணீர் கிடைப்பதில்லை. தமிழ்நாடு மீனவர்கள் குறித்து மத்திய அரசு எந்த ஒரு கவனமும் கொள்ளவில்லை.

சமீபத்தில் கேரளா எல்லைக்குள் இத்தாலி கப்பல் நுழைந்து கேரளா மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றனர். உடனடியாக இந்திய அரசு இரண்டு இத்தாலிய மாலுமிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தமிழ்நாடு மீனவர்கள் ஆயிரத்து 500 நபர்களை இலங்கை கப்பல் படையினர் கொலை செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இந்திய அரசு எடுக்கவில்லை. இந்திய அரசு இலங்கையை நட்பு நாடாக கருதுகிறது. இந்திய அரசு வலிமையான முடிவு எடுக்காததால் இலங்கை அரசு மனித உரிமை மீறலை மேற்கொண்டு வருகிறது.

இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை கைது செய்வதும், அதன் பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும் பின்பு இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களின் பொருள்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவர்களை மட்டும் விடுதலை செய்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

2021 ஜனவரி 18ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக வாடகை படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்ற மெசியா, நாகராஜ், செந்தில் குமரன், சாம்சந்தவின் ஆகிய 4 நபர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து துன்புறுத்தி கொலை செய்து கடலில் வீசியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட 4 மீனவர்களுக்கு இலங்கை அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கொலை செய்த இலங்கை கடற்படையை சேர்ந்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனு அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் தற்போதுவரை மேற்கொள்ளவில்லை.

எனவே 4 இந்திய மீனவர்களை கொலை செய்த இலங்கை கப்பல் படையை சேர்ந்த நபர்களை கைது செய்யவும், இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கும் இலங்கை அரசு நிவாரணம் வழங்கவும், மீனவர்களையும் அவர்களது உடைமைகளையும் காப்பாற்றுவதற்கு முறையான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்த்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தனி அலுவலர்கள் பதவிக்கால நீட்டிப்பு மசோதா தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.