மதுரை: துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா நுண்ணறிவுப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அலுவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
துபாயிலிருந்து வந்த 182 பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அதில் மதுரையைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவர், சுத்தியலில் தங்கத்தை மறைந்து எடுத்து வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, கடத்தப்பட்ட 10 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 198 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், சுப்புராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.