மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது முதலைக்குளம் கிராமம். இந்த கிராமத்திலுள்ள 18ஆம் படி கருப்புசாமி கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீன்பிடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் முதல் வியாழக்கிழமை அன்று நடைபெறுவது வழக்கம்.
அதன் பொருட்டு இன்று காலை 6 மணிக்கு முதலைக்குளம் கண்மாயில் பாரம்பரிய மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள் என பெரும் திரளாகக் கலந்துகொண்டு கண்மாயில் இறங்கி, கைகளாலும், வலைகளைக் கொண்டும், மீன்களை அள்ளிச் சென்றனர்.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், இந்த மீன் பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர். முதலைக்குளம் கிராம குழு தலைவர் ராமர் தலைமையில் ஊர் நாட்டாண்மைகாரர்கள், ஊராட்சித் தலைவர், கோவில் பெரிய பூசாரி பாண்டி ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதையும் படிங்க: சித்திரைத் திருவிழா: பொதுமக்களை அனுமதிக்கக் கோரி மதுரையில் போராட்டம்