ETV Bharat / city

அதிமுகவுடன் இணைந்து பாஜக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் - ஜெ.பி. நட்டா

author img

By

Published : Jan 31, 2021, 9:58 AM IST

தமிழ்நாட்டில் வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுகவுடன் இணைந்து பாஜக சந்திக்கும்; தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டு உரிமைகளை பாஜக என்றென்றும் மதிக்கும் என்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெபி நட்டா தெரிவித்துள்ளார்.

ஜெ.பி. நட்டா
ஜெ.பி. நட்டா

மதுரை: பாஜக சார்பாக தேர்தல் பரப்புரைக் கூட்டம் மதுரை பாண்டிகோவில் அருகே மஸ்தான்பட்டியில் தொடங்கியது. இதில் அக்கட்சியின் மாநில மற்றும் தேசிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நிறைவுரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்மொழியின் பெருமை குறித்து பிரதமர் மோடி, தான் செல்கின்ற இடமெல்லாம் பேசி மகிழ்கிறார். திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுகிறார். இவையெல்லாம் தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் அவர் தருகின்ற மரியாதையாகும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்தபோது தமிழ்நாட்டிற்கு 13ஆவது நிதிக் குழு மூலமாக 94 ஆயிரத்து 540 கோடி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு 15-வது நிதிக் குழு மூலமாக 5 லட்சத்து 42 ஆயிரத்து 68 கோடி தமிழ்நாட்டிற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஜவுளித்தொழில் வளர்ச்சிக்காக, கடந்த அரசுகள் எதுவும் வழங்காத நிலையில், மோடி ரூ.1,600 கோடி வழங்கினார். பாதுகாப்புத்துறைக்காக ரூ.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, ஓசூர் ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இளைஞர்கள் அதிகம் வேலைவாய்ப்பு பெறும் சூழல் உருவாகியுள்ளது.

தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டன. அதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 58 லட்சத்திற்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 40 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டன. அதில் தமிழ்நாட்டில் 95 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ளன. உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8 கோடி குடும்பங்களுக்கும், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 30 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 11 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். அவர்களில் தமிழ்நாட்டில் மட்டும் 35 லட்சம் விவசாயிகள் மத்திய அரசு வழங்கும் நிதியைப் பெற்றுள்ளனர். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 66 லட்சம் பேருக்கு சொந்த வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் மட்டும் பயனடைந்துள்ளனர். பெண்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் பிரதமர் மோடி கொண்டு வருகின்ற திட்டங்களில் தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.

அதேபோன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 1200 கோடியில் அமைவதற்கு பிரதமர் மோடி உடனே ஒப்புதல் அளித்தார். 100 மருத்துவ இடங்களும், 100 பாரா மெடிக்கல் இடங்களும் ஆண்டுதோறும் கிடைக்கும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரயில், 13 சீர்மிகு நகரங்கள் என பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ளது என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை மதிக்காத திமுக, தேச விரோத சக்தி. வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக இயங்கக்கூடிய கட்சி திமுக. திருநீறைக் கீழே கொட்டுவது, நெற்றியிலிடப்பட்ட குங்குமத்தை அழிப்பது போன்ற செயல்களைத்தான் திமுக செய்து வருகிறது. ஆனால் அண்மையில் பாஜக மேற்கொண்ட வேல் யாத்திரைக்குப் பிறகு, திமுக தலைவர் ஸ்டாலின் வேல் ஏந்தத் தொடங்கியுள்ளார்.வருகின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக, அதிமுகவுடனும், கூட்டணிக் கட்சிகளோடும் இணைந்து சந்திக்கும்.

இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் பார்க்கும் போது தமிழ்நாட்டில் தாமரை நிச்சயம் மலரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இந்த வேகத்தை சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் வெல்லும் வரை காட்ட வேண்டும்" என்றார்

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணியை இறுதிசெய்தார் ஜெ.பி. நட்டா!

மதுரை: பாஜக சார்பாக தேர்தல் பரப்புரைக் கூட்டம் மதுரை பாண்டிகோவில் அருகே மஸ்தான்பட்டியில் தொடங்கியது. இதில் அக்கட்சியின் மாநில மற்றும் தேசிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நிறைவுரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்மொழியின் பெருமை குறித்து பிரதமர் மோடி, தான் செல்கின்ற இடமெல்லாம் பேசி மகிழ்கிறார். திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுகிறார். இவையெல்லாம் தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் அவர் தருகின்ற மரியாதையாகும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்தபோது தமிழ்நாட்டிற்கு 13ஆவது நிதிக் குழு மூலமாக 94 ஆயிரத்து 540 கோடி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு 15-வது நிதிக் குழு மூலமாக 5 லட்சத்து 42 ஆயிரத்து 68 கோடி தமிழ்நாட்டிற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஜவுளித்தொழில் வளர்ச்சிக்காக, கடந்த அரசுகள் எதுவும் வழங்காத நிலையில், மோடி ரூ.1,600 கோடி வழங்கினார். பாதுகாப்புத்துறைக்காக ரூ.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, ஓசூர் ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இளைஞர்கள் அதிகம் வேலைவாய்ப்பு பெறும் சூழல் உருவாகியுள்ளது.

தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டன. அதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 58 லட்சத்திற்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 40 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டன. அதில் தமிழ்நாட்டில் 95 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ளன. உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8 கோடி குடும்பங்களுக்கும், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 30 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 11 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். அவர்களில் தமிழ்நாட்டில் மட்டும் 35 லட்சம் விவசாயிகள் மத்திய அரசு வழங்கும் நிதியைப் பெற்றுள்ளனர். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 66 லட்சம் பேருக்கு சொந்த வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் மட்டும் பயனடைந்துள்ளனர். பெண்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் பிரதமர் மோடி கொண்டு வருகின்ற திட்டங்களில் தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.

அதேபோன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 1200 கோடியில் அமைவதற்கு பிரதமர் மோடி உடனே ஒப்புதல் அளித்தார். 100 மருத்துவ இடங்களும், 100 பாரா மெடிக்கல் இடங்களும் ஆண்டுதோறும் கிடைக்கும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரயில், 13 சீர்மிகு நகரங்கள் என பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ளது என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை மதிக்காத திமுக, தேச விரோத சக்தி. வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக இயங்கக்கூடிய கட்சி திமுக. திருநீறைக் கீழே கொட்டுவது, நெற்றியிலிடப்பட்ட குங்குமத்தை அழிப்பது போன்ற செயல்களைத்தான் திமுக செய்து வருகிறது. ஆனால் அண்மையில் பாஜக மேற்கொண்ட வேல் யாத்திரைக்குப் பிறகு, திமுக தலைவர் ஸ்டாலின் வேல் ஏந்தத் தொடங்கியுள்ளார்.வருகின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக, அதிமுகவுடனும், கூட்டணிக் கட்சிகளோடும் இணைந்து சந்திக்கும்.

இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் பார்க்கும் போது தமிழ்நாட்டில் தாமரை நிச்சயம் மலரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இந்த வேகத்தை சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் வெல்லும் வரை காட்ட வேண்டும்" என்றார்

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணியை இறுதிசெய்தார் ஜெ.பி. நட்டா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.