ETV Bharat / city

'6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயோமெட்ரிக் முறை' - செங்கோட்டையன் - School education minister senkottaiyan press meet

ஈரோடு: "6 முதல் 8 வரை உள்ள வகுப்பு மாணவர்களுக்கும் பயோமெட்ரிக்முறை அமல்படுத்தப்படும்" எனத் தமிழ்நாடுப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
author img

By

Published : Jun 7, 2019, 11:00 PM IST

கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடுப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், துறை வாரியாக நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். புதிய திட்டங்கள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள தடைகள் குறித்தும், அதைக் களைவது குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் வசதி படைத்தவர்கள் ஒரு பள்ளியையாவது தத்தெடுக்கவேண்டும். குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும் என்றால் மழை பெய்யவேண்டும். மழை பெய்ய மரங்கள் வளர்க்கவேண்டும் என்ற நோக்கில் மாணவர்கள் மரம் வளர்க்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. மாணவர்கள் மரங்களை நடுவது மட்டுமல்ல... அவற்றை வளர்க்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. 6 முதல் 8 வரை உள்ள வகுப்பு மாணவர்களுக்கும் பயோமெட்ரிக்முறை அமல்படுத்தப்படும், என்றார்.

கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடுப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், துறை வாரியாக நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். புதிய திட்டங்கள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள தடைகள் குறித்தும், அதைக் களைவது குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் வசதி படைத்தவர்கள் ஒரு பள்ளியையாவது தத்தெடுக்கவேண்டும். குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும் என்றால் மழை பெய்யவேண்டும். மழை பெய்ய மரங்கள் வளர்க்கவேண்டும் என்ற நோக்கில் மாணவர்கள் மரம் வளர்க்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. மாணவர்கள் மரங்களை நடுவது மட்டுமல்ல... அவற்றை வளர்க்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. 6 முதல் 8 வரை உள்ள வகுப்பு மாணவர்களுக்கும் பயோமெட்ரிக்முறை அமல்படுத்தப்படும், என்றார்.

6 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கும் பயோமெட்ரிக்முறை அமுல்படுத்தப்படும்  : தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  

--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 


TN_ERD_02_07_SATHY_KAS_MINISTER_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்pப்பின் போது தொடக்கப்பள்ளிகளிலும் மழையர் வகுப்புள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் 6 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கும் பயோமெட்ரிக்முறை அமுல்படுத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு முறை ஆன்லைன்னில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலையில் நடைபெற்ற அனைத்து துறை அதிகாhளுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துறை வாரியாக நிறைவேற்றபட்டுள்ள திட்டக்கள் குறித்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். புதிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள தடைகள் குறித்தும் அதை கலைவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனார். முன்னதாக பொதுமக்கள் அளித்த புகார் மனுகளை பெற்றுக்கொண்டு துறை வாரியாக மனுக்களை பிரித்து கொடுத்து புகார் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகோள்விடுத்தார். அதனை தொடர்ந்து ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டுவருவதாகவும் கோபிசெட்டிபாளையத்தில் அனைவரும் வீடு கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ப்பட்டுள்ளதாகவும் வரும் காலத்தில் உலகில் குடிநீர் பிரச்சனை தான் அதிகளவு இருக்கும் அதனால் தான் வரும் 25 ஆண்டு:களுக்கு தேவையாக குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுள்ள நிலையில் வசதி படைத்தவர்கள் ஒரு பள்ளியையாவது தந்தெடுக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என்றால் மழை பெய்யவேண்டும் மழை பெய்ய மரங்கள் வளர்க்கவேண்டும் என்றநோக்கில் மாணவர்கள் மரம் வளர்க்கும் திட்டம் முதல்வர் தொடங்கிவைக்கவுள்ளார். மாணவர்கள் மரங்களை நடுவது மட்டுமல்ல அவற்றை வளர்க்கும் மாணவர்களுக்கு மதிபெண்கள் வழக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தமிழகத்தில் அனைத்துத்துறைகளும் வளர்ச்சியடைந்து வருகிறது. துறை வாரியாக மத்திய அரசிடமிருந்து சாதனைக்காக விருதுகள் பெற்றுவருகிறோம்.  முதல்வர்கள் தேவையான நிதிகளை அளித்துவருகின்றனர் நிதிகளை பெற்று திட்டப்பணிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.  தற்போது நடுநிலைப்பள்ளிகளில் தொங்கப்பட்டுள்ள மழலையர் கல்வி  தொடக்கப்பள்ளிகளிலும் எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  6 முதல் 8 வரை 7 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டுவரப்படும்.  உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. 6 முதல் எட்டு வரையுள்ள பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஆன்லைன்னில் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இனி தேர்வுகள் ஆன்லைன் மூலமாகத்தான் தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் காலத்தில் நாற்பது நாட்களுக்குள் ஆசிhயிர் தகுதித்தேர்வு தேர்வு முடிவுகள் வெளியிடும் அளவிற்கு தேர்வு முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. என அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குநர் பாலகணேஷ் மற்றும் அனைத்துத்துறை உயர் அதிகாரிகள் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனா

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.