ETV Bharat / city

குப்பைத் தொட்டி அருகே எரிந்த நிலையில் கிடந்த ஆண் உடல் - குப்பைத் தொட்டியில் ஆண் உடல்

ஈரோடு: கணபதிபுரம் பகுதி குப்பைத் தொட்டி அருகே எரிந்த நிலையில் கிடந்த ஆண் உடலை காவல் துறையினர் மீட்டனர்.

burn-male-body-recovery
burn-male-body-recovery
author img

By

Published : Aug 8, 2020, 10:08 AM IST

ஈரோடு கருங்கல்பாளையம் கணபதிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 08) அப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டி அருகே கடுமையான கருகும் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனையடுத்து சாலையில் சென்றவர்கள் அங்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் ஒன்று இருந்துள்ளது. உடனே அவர்கள் இதுகுறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் 45 வயது மதிக்கத்தக்க அதே பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கருவேலங்காட்டுக்குள் இளைஞர் எரித்துக் கொலை

ஈரோடு கருங்கல்பாளையம் கணபதிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 08) அப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டி அருகே கடுமையான கருகும் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனையடுத்து சாலையில் சென்றவர்கள் அங்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் ஒன்று இருந்துள்ளது. உடனே அவர்கள் இதுகுறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் 45 வயது மதிக்கத்தக்க அதே பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கருவேலங்காட்டுக்குள் இளைஞர் எரித்துக் கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.