ETV Bharat / city

T23 புலியை ஆட்கொல்லி என சொல்ல முடியாது - வன உயிரின பாதுகாவலர்

ஆட்கொல்லி புலியின் முதன்மை உணவாக மனிதர்களே இருக்க முடியும். ஆனால், டி23 புலி மாடுகளையும் வேட்டையாடுவதால் இதை ஆட்கொல்லி புலி என சொல்லிவிட முடியாது என தமிழ்நாடு முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Oct 6, 2021, 6:14 PM IST

ஆட்கொல்லி குறித்து விளக்கும் சேகர் குமார் நீரஜ்
ஆட்கொல்லி குறித்து விளக்கும் சேகர் குமார் நீரஜ்

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட பகுதியில் டி23 புலியை பிடிக்கும் முயற்சி 12ஆவது நாளாக நடைபெற்றுவருகிறது. இந்த பணிகளை தமிழ்நாடு முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் பார்வையிட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “டி23 புலி மனிதர்களை சில இடங்களில் கொன்றது குறித்து அறிவியல் பூர்வமான விசாரணை நடைபெற்று வருகின்றது. தினமும் புதிய வியூகங்களை அறிவியல் ரீதியாக செயல்படுத்தி புலியை பிடிக்க முயன்று வருகிறோம்.

பரண்கள் அமைத்து புலி கண்காணிப்பு

புலியின் பாதுகாப்பு, வனத்துறையினர் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பணிகள் நடைபெறுகின்றன. சிங்காரா வனப்பகுதியில் புலியின் தடயங்கள் இருப்பதால் அங்கு கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளோம். புலியின் வயது காரணமாக அதற்கு வேட்டையாடுவதில் சிரமங்கள் இருக்கின்றது.

சிங்காரா வனப்பகுதியில் பரண்கள் அமைத்து புலியை கண்காணித்து வருகிறோம். அந்த பகுதியில் எந்தவித இடையூறும் இல்லாதபடி பார்த்து கொள்ளப்படுகின்றது மன்றாடியார் வனப்பகுதியிலும் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.

தெர்மல் டிரோன் மூலமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. அறிவியல் பூர்வமாக புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

T23 புலியை ஆட்கொல்லியாக கருத முடியாது

தொடர்ந்து பேசிய அவர், “ஆறு மருத்துவக் குழுவினர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் புலியை ஆட்கொல்லி என சொல்ல முடியாது. ஆட்கொல்லி புலியின் முதன்மை உணவாக மனிதர்களாக இருக்க வேண்டும். இந்தப் புலி அப்படி இல்லை என்பதால் இதை ஆட்கொல்லி புலியாக இதை எடுத்துக்கொள்ள முடியாது.

புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து அதை மருத்துவக் குழுவினர் மூலம் கண்காணித்து அதன் நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட இருக்கின்றன. இந்தப் புலியால் ஏற்பட்ட நான்கு இறப்புகளில் முதல் இரண்டு இறப்புகள் புலியால்தான் நடந்தது என்பதை உறுதிப்படுத்தவில்லை. இதற்கு டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

மருத்துவக் குழு முடிவு

புலியை பிடித்துக் கூண்டில் அடைத்தால் அது மனரீதியாக பாதிக்கப்படும் என்பது உண்மை, ஆனால் அதை சரி செய்துவிட முடியும். வருங்காலங்களில் பிரச்சினைக்குரிய புலிகளை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ஆட்கொல்லி குறித்து விளக்கும் சேகர் குமார் நீரஜ்

ரேடியோ காலர்களின் எடையும் 5 கிலோவரை இருக்கும் என்பதால் அதற்கு பிரச்சினை இருக்காது. புலியை மயக்க மருத்து கொடுத்து பிடித்த பின்னர், அடுத்த என்ன செய்யலாம் என்பதை மருத்துவக் குழுவினர் முடிவு செய்து சொல்வார்கள்.

இதற்காக டெல்லியில் இருந்து ரேடியோ காலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. காடுகளில் வாழும் புலி 14 வருடங்கள் வரை உயிருடன் இருக்கும். ஆனால் வன உயிரின பூங்காக்களில் அடைத்து அவற்றை பாதுகாக்கும்போது கூடுதலாக 10 ஆண்டுகள் உயிருடன் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: T23 புலியை பிடிப்பதில் இருக்கும் சவால்கள் - விளக்குகிறார் சூழலியல் ஆர்வலர் சாதிக்

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட பகுதியில் டி23 புலியை பிடிக்கும் முயற்சி 12ஆவது நாளாக நடைபெற்றுவருகிறது. இந்த பணிகளை தமிழ்நாடு முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் பார்வையிட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “டி23 புலி மனிதர்களை சில இடங்களில் கொன்றது குறித்து அறிவியல் பூர்வமான விசாரணை நடைபெற்று வருகின்றது. தினமும் புதிய வியூகங்களை அறிவியல் ரீதியாக செயல்படுத்தி புலியை பிடிக்க முயன்று வருகிறோம்.

பரண்கள் அமைத்து புலி கண்காணிப்பு

புலியின் பாதுகாப்பு, வனத்துறையினர் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பணிகள் நடைபெறுகின்றன. சிங்காரா வனப்பகுதியில் புலியின் தடயங்கள் இருப்பதால் அங்கு கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளோம். புலியின் வயது காரணமாக அதற்கு வேட்டையாடுவதில் சிரமங்கள் இருக்கின்றது.

சிங்காரா வனப்பகுதியில் பரண்கள் அமைத்து புலியை கண்காணித்து வருகிறோம். அந்த பகுதியில் எந்தவித இடையூறும் இல்லாதபடி பார்த்து கொள்ளப்படுகின்றது மன்றாடியார் வனப்பகுதியிலும் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.

தெர்மல் டிரோன் மூலமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. அறிவியல் பூர்வமாக புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

T23 புலியை ஆட்கொல்லியாக கருத முடியாது

தொடர்ந்து பேசிய அவர், “ஆறு மருத்துவக் குழுவினர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் புலியை ஆட்கொல்லி என சொல்ல முடியாது. ஆட்கொல்லி புலியின் முதன்மை உணவாக மனிதர்களாக இருக்க வேண்டும். இந்தப் புலி அப்படி இல்லை என்பதால் இதை ஆட்கொல்லி புலியாக இதை எடுத்துக்கொள்ள முடியாது.

புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து அதை மருத்துவக் குழுவினர் மூலம் கண்காணித்து அதன் நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட இருக்கின்றன. இந்தப் புலியால் ஏற்பட்ட நான்கு இறப்புகளில் முதல் இரண்டு இறப்புகள் புலியால்தான் நடந்தது என்பதை உறுதிப்படுத்தவில்லை. இதற்கு டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

மருத்துவக் குழு முடிவு

புலியை பிடித்துக் கூண்டில் அடைத்தால் அது மனரீதியாக பாதிக்கப்படும் என்பது உண்மை, ஆனால் அதை சரி செய்துவிட முடியும். வருங்காலங்களில் பிரச்சினைக்குரிய புலிகளை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ஆட்கொல்லி குறித்து விளக்கும் சேகர் குமார் நீரஜ்

ரேடியோ காலர்களின் எடையும் 5 கிலோவரை இருக்கும் என்பதால் அதற்கு பிரச்சினை இருக்காது. புலியை மயக்க மருத்து கொடுத்து பிடித்த பின்னர், அடுத்த என்ன செய்யலாம் என்பதை மருத்துவக் குழுவினர் முடிவு செய்து சொல்வார்கள்.

இதற்காக டெல்லியில் இருந்து ரேடியோ காலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. காடுகளில் வாழும் புலி 14 வருடங்கள் வரை உயிருடன் இருக்கும். ஆனால் வன உயிரின பூங்காக்களில் அடைத்து அவற்றை பாதுகாக்கும்போது கூடுதலாக 10 ஆண்டுகள் உயிருடன் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: T23 புலியை பிடிப்பதில் இருக்கும் சவால்கள் - விளக்குகிறார் சூழலியல் ஆர்வலர் சாதிக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.