ETV Bharat / city

தமிழ்நாட்டில் ஏழை என்ற பெயருக்கு இடமில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ! - வெற்றி நடைபோடும் தமிழ்நாடு

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் ஏழை என்ற பெயருக்கு இடமில்லை, கிராமத்தில் அனைவருக்கும் கான்கிரிட் வீடுகள், நகரத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Chief Minister Edappadi Palanisamy
author img

By

Published : Jan 24, 2021, 2:05 PM IST

‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்டமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று (ஜன.24) காலை புளியகுளத்தில் தொடங்கி ராமநாதபுரம், சிங்காநல்லூர், காளப்பட்டி, குரும்ப பாளையம், கோவில் பாளையம் ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன்னூரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “ கோயம்புத்தூர் மாவட்டத்தில் அவினாசி - அத்திக்கடவு, திட்டம் நடைமுறைக்கு வரும்போது, அன்னூர் பகுதியில் வறட்சி நீங்கும். இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய அரசு அதிமுக. மனிதருக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் விவசாயிக்கு உயிரான நீரை வழங்கியது அதிமுகதான்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மேலும் நீரை வீணாக்காமல் தேங்கி வைக்க அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டது. ரூ.247 கோடி திட்டத்தில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருந்ததியர் சமுதாய மக்கள் வாழும் வீட்டிற்கு சென்று டீ குடித்து வந்துள்ளேன். ஏழை வீட்டிற்கு வந்துள்ளீர்களா? என அவர்கள் கேட்டார்கள் தமிழ்நாட்டில் ஏழை என்ற பெயருக்கு இடமில்லை, கிராமத்தில் அனைவருக்கும் வீடு, நகரத்தில் அடுக்குமாடி வீடுகள் வழங்கப்படுகிறது.

தாய் பெற்றெடுத்த குழந்தையை வளர்ப்பதுபோல அதிமுக மாணவர்களை வளர்க்கிறது. வல்லரசு அமெரிக்கா நாடு கூட இலவச மடிக்கணினி வழங்கவில்லை, ஆனால் தமிழ்நாட்டில் அதிமுக அரசு வழங்கியது. மு.க ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து பொய் சொல்லி வருகிறார். 2010ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் அங்கம் வகித்த திமுக இருக்கும்போதுதான் நீட் வந்தது. அதை தடுக்க அதிமுக முயன்றது.

13 ஆண்டுகாலம் மத்தியில் கூட்டணியில் இருந்தும் கூட, நீலகிரி திமுக எம்பி ஆ. ராசா, உட்பட அனைவரும் வாய்ப்பொத்தி பதவி, அதிகாரம் முக்கியம் என மௌனம் சாதித்துவிட்டு, தற்போது பொய் சொல்லி வருகின்றனர். அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 2,87,000 மகளிருக்கு மானியம் வழங்கப்பட்டது. முதலமைச்சர் சிறப்பு குறைதீர் கூட்டம் மூலம் அரசாங்கமே உங்களை நாடி வருகிறது. 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, ஐந்து லட்சம் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

திமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஸ்டாலின் குடும்பத்தில் பெயர்களே உதயநிதி, தயாநிதி என்றுள்ளது. நிதியில்தான் அவர்கள் எண்ணம் உள்ளது. ஊழல் என்ற வார்த்தை தமிழ்நாட்டில் உதித்தது திமுக ஆட்சியில்தான். இந்திய வரலாற்றிலேயே ஊழலுக்காக அரசாங்கம் கலைக்கப்பட்டது.

உலக அளவுக்கு பிரசித்தி பெற்ற ஊழல் 2ஜி. அந்த வழக்கின் மேல்முறையீடு நடைபெற்று வருகிறது. ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்த எம்பி-யை அழைத்துக்கொண்டு ஸ்டாலின் ஆளுநரிடம் மனு அளிக்கிறார். திருடன் கையிலே சாவி கொடுத்தால் எப்படி? 450 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக என் மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னார்கள்.

எதுவுமே நடைபெறாத சம்பவத்தை ஊடகம் மூலம் சொன்னவர்தான் ஸ்டாலின். பொய்யான பரப்புரை, பொய்யான அறிக்கையை ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இந்த தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2,500 கொடுப்பதை தடுக்க திமுக நீதிமன்றம் சென்றதை அதிமுக முறியடித்தது. 27ஆம் தேதி எம்ஜிஆர் நினைவிடம் அருகே ஜெயலலிதா நினைவிடம் திறக்க உள்ளோம். இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்” என்றார்.

முன்னதாக அன்னூர் வரும் வழியில் கரியாம்பாளையம் பகுதியில் பட்டத்தரசி அம்மன் கோயிலுக்கு சென்ற முதலமைச்சர், கோயில் அருகே இருந்த அதிமுக கட்சி தொண்டர் வீட்டில் தேநீர் அருந்திவிட்டு சென்றார்.

இதையும் படிங்க: எழுந்து நடக்கிறார் சசிகலா; சீராகும் உடல்நிலை

‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்டமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று (ஜன.24) காலை புளியகுளத்தில் தொடங்கி ராமநாதபுரம், சிங்காநல்லூர், காளப்பட்டி, குரும்ப பாளையம், கோவில் பாளையம் ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன்னூரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “ கோயம்புத்தூர் மாவட்டத்தில் அவினாசி - அத்திக்கடவு, திட்டம் நடைமுறைக்கு வரும்போது, அன்னூர் பகுதியில் வறட்சி நீங்கும். இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய அரசு அதிமுக. மனிதருக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் விவசாயிக்கு உயிரான நீரை வழங்கியது அதிமுகதான்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மேலும் நீரை வீணாக்காமல் தேங்கி வைக்க அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டது. ரூ.247 கோடி திட்டத்தில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருந்ததியர் சமுதாய மக்கள் வாழும் வீட்டிற்கு சென்று டீ குடித்து வந்துள்ளேன். ஏழை வீட்டிற்கு வந்துள்ளீர்களா? என அவர்கள் கேட்டார்கள் தமிழ்நாட்டில் ஏழை என்ற பெயருக்கு இடமில்லை, கிராமத்தில் அனைவருக்கும் வீடு, நகரத்தில் அடுக்குமாடி வீடுகள் வழங்கப்படுகிறது.

தாய் பெற்றெடுத்த குழந்தையை வளர்ப்பதுபோல அதிமுக மாணவர்களை வளர்க்கிறது. வல்லரசு அமெரிக்கா நாடு கூட இலவச மடிக்கணினி வழங்கவில்லை, ஆனால் தமிழ்நாட்டில் அதிமுக அரசு வழங்கியது. மு.க ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து பொய் சொல்லி வருகிறார். 2010ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் அங்கம் வகித்த திமுக இருக்கும்போதுதான் நீட் வந்தது. அதை தடுக்க அதிமுக முயன்றது.

13 ஆண்டுகாலம் மத்தியில் கூட்டணியில் இருந்தும் கூட, நீலகிரி திமுக எம்பி ஆ. ராசா, உட்பட அனைவரும் வாய்ப்பொத்தி பதவி, அதிகாரம் முக்கியம் என மௌனம் சாதித்துவிட்டு, தற்போது பொய் சொல்லி வருகின்றனர். அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 2,87,000 மகளிருக்கு மானியம் வழங்கப்பட்டது. முதலமைச்சர் சிறப்பு குறைதீர் கூட்டம் மூலம் அரசாங்கமே உங்களை நாடி வருகிறது. 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, ஐந்து லட்சம் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

திமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஸ்டாலின் குடும்பத்தில் பெயர்களே உதயநிதி, தயாநிதி என்றுள்ளது. நிதியில்தான் அவர்கள் எண்ணம் உள்ளது. ஊழல் என்ற வார்த்தை தமிழ்நாட்டில் உதித்தது திமுக ஆட்சியில்தான். இந்திய வரலாற்றிலேயே ஊழலுக்காக அரசாங்கம் கலைக்கப்பட்டது.

உலக அளவுக்கு பிரசித்தி பெற்ற ஊழல் 2ஜி. அந்த வழக்கின் மேல்முறையீடு நடைபெற்று வருகிறது. ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்த எம்பி-யை அழைத்துக்கொண்டு ஸ்டாலின் ஆளுநரிடம் மனு அளிக்கிறார். திருடன் கையிலே சாவி கொடுத்தால் எப்படி? 450 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக என் மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னார்கள்.

எதுவுமே நடைபெறாத சம்பவத்தை ஊடகம் மூலம் சொன்னவர்தான் ஸ்டாலின். பொய்யான பரப்புரை, பொய்யான அறிக்கையை ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இந்த தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2,500 கொடுப்பதை தடுக்க திமுக நீதிமன்றம் சென்றதை அதிமுக முறியடித்தது. 27ஆம் தேதி எம்ஜிஆர் நினைவிடம் அருகே ஜெயலலிதா நினைவிடம் திறக்க உள்ளோம். இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்” என்றார்.

முன்னதாக அன்னூர் வரும் வழியில் கரியாம்பாளையம் பகுதியில் பட்டத்தரசி அம்மன் கோயிலுக்கு சென்ற முதலமைச்சர், கோயில் அருகே இருந்த அதிமுக கட்சி தொண்டர் வீட்டில் தேநீர் அருந்திவிட்டு சென்றார்.

இதையும் படிங்க: எழுந்து நடக்கிறார் சசிகலா; சீராகும் உடல்நிலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.