ETV Bharat / city

'தூத்துக்குடி டூ கோவை... விரைவில் ஆக்ஸிஜன் சேவை' - அமைச்சர் சக்கரபாணி

author img

By

Published : May 13, 2021, 10:43 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை கோவைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

'தூத்துக்குடி டூ கோவை.. விரைவில் ஆக்ஸிஜன் சேவை' - அமைச்சர் சக்கரபாணி
'தூத்துக்குடி டூ கோவை.. விரைவில் ஆக்ஸிஜன் சேவை' - அமைச்சர் சக்கரபாணி

கோவை: ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள கோயம்புத்தூர் தொழில் துறை கூட்டமைப்பு சங்கத்தின் அரங்கில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசுத்துறை அலுவலர்கள், தொழில் நிறுவனங்களின் பிரதி நிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அப்போது ஆளுங்கட்சி அமைச்சர்களும், எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். முன்வரிசையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு இடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், "எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று இல்லாமல் அனைவரும் ஒன்றுபட்டு கரோனா பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். இப்பிரச்னைக்குத் தீர்வு காண எதிர்க்கட்சியினர் ஆலோசனைகள் வழங்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

கோவையில் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச்சு:

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "இரண்டாவது அலை தொற்று கடுமையாக உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை முக்கியப் பிரச்னையாக உள்ளது. தனியார் மருத்துவமனைகள் படுக்கைகளைக் குறைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் நிலைமை மோசமாகும். படுக்கை, தடுப்பூசி, ரெம்டெசிவிர், ஆக்சிஜன், உடல்கள் எரியூட்டுதல் ஆகிய வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் 100 விழுக்காடு ஒத்துழைப்புத் தருவோம்" எனத் தெரிவித்தார்.

அமைச்சர் சக்கரபாணி பேச்சு:

இதையடுத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, "கரோனா இரண்டாவது அலை கொடூரமாக உள்ளது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொழில் துறையினர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆக்சிஜனை கூடுதலாகப் பெற மத்திய அரசிடம் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை கோவைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேசன் அட்டைதாரர்களுக்கு வருகின்ற 15ஆம் தேதி முதல் கரோனா நிவாரணம் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

திமுக அமைச்சர்களுடன் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றது. அனைவரும் ஒன்றிணைந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். கரோனாவை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரெம்டெசிவிர் மருந்து வாங்க கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசுடன் பேசி ரெம்டெசிவிர் அதிகரிக்கப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட முதலீட்டு மானியம் 250 கோடி ரூபாயில், 168 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்படும். ஆக்சிஜன், படுக்கை, தடுப்பூசி உள்ளிட்ட வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

கோவை: ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள கோயம்புத்தூர் தொழில் துறை கூட்டமைப்பு சங்கத்தின் அரங்கில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசுத்துறை அலுவலர்கள், தொழில் நிறுவனங்களின் பிரதி நிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அப்போது ஆளுங்கட்சி அமைச்சர்களும், எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். முன்வரிசையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு இடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், "எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று இல்லாமல் அனைவரும் ஒன்றுபட்டு கரோனா பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். இப்பிரச்னைக்குத் தீர்வு காண எதிர்க்கட்சியினர் ஆலோசனைகள் வழங்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

கோவையில் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச்சு:

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "இரண்டாவது அலை தொற்று கடுமையாக உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை முக்கியப் பிரச்னையாக உள்ளது. தனியார் மருத்துவமனைகள் படுக்கைகளைக் குறைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் நிலைமை மோசமாகும். படுக்கை, தடுப்பூசி, ரெம்டெசிவிர், ஆக்சிஜன், உடல்கள் எரியூட்டுதல் ஆகிய வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் 100 விழுக்காடு ஒத்துழைப்புத் தருவோம்" எனத் தெரிவித்தார்.

அமைச்சர் சக்கரபாணி பேச்சு:

இதையடுத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, "கரோனா இரண்டாவது அலை கொடூரமாக உள்ளது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொழில் துறையினர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆக்சிஜனை கூடுதலாகப் பெற மத்திய அரசிடம் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை கோவைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேசன் அட்டைதாரர்களுக்கு வருகின்ற 15ஆம் தேதி முதல் கரோனா நிவாரணம் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

திமுக அமைச்சர்களுடன் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றது. அனைவரும் ஒன்றிணைந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். கரோனாவை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரெம்டெசிவிர் மருந்து வாங்க கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசுடன் பேசி ரெம்டெசிவிர் அதிகரிக்கப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட முதலீட்டு மானியம் 250 கோடி ரூபாயில், 168 கோடி ரூபாய் உடனடியாக விடுவிக்கப்படும். ஆக்சிஜன், படுக்கை, தடுப்பூசி உள்ளிட்ட வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.