ETV Bharat / city

கோவையில் மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறிப்பு!

author img

By

Published : Nov 25, 2020, 11:44 AM IST

கோவை: கணபதி பகுதியில் 63 வயது மூதாட்டியின் கழுத்தில் இருந்த 10 பவுன் செயினை இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பறித்து சென்றனர்.

robbery
robbery

கணபதி பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் (63) நேற்று (நவ. 24) மாலை அவரது வீட்டின் முன்பு விஷேசத்திற்காக செல்ல நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்து சென்றுள்ளனர். இதில் தவறி விழுந்த மூதாட்டிக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து மூதாட்டி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கோவையில் செயின் பறிப்பு சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் விரைந்து ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கணபதி பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் (63) நேற்று (நவ. 24) மாலை அவரது வீட்டின் முன்பு விஷேசத்திற்காக செல்ல நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்து சென்றுள்ளனர். இதில் தவறி விழுந்த மூதாட்டிக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து மூதாட்டி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கோவையில் செயின் பறிப்பு சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் விரைந்து ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.