கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் வருகிற 23ஆம் தேதி ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் மூன்றாமாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன், செயலாளர் தங்கவேலு, தமிழ்நாடு ரேக்ளா பேரவை தலைவர் அர்ஜூனன், மற்றும் காவல் துறையினர் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் ஏற்பாட்டு பணிகளை பார்வையிட்டனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கோவை ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன், மூன்றாமாண்டு ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 23ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற உள்ளது. தமிழகத்திலேயே மிகப்பெரிய கேலரி அமைத்து மக்களுக்கு தீங்கு இல்லாமல் இருக்க சீரும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்துள்ளோம். மேலும் மக்களுக்கு தண்ணீர்,உணவு,பேருந்து வசதிகளை மாவட்ட நிர்வாகமே செய்துள்ளது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டு மாடுகளின் காளை கண்காட்சியும், கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். மேலும் 750 முதல் 900 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் போட்டியில் கலந்துகொள்வார்கள். ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராட்டம் நடத்திய அனைத்து இளைஞர்களுக்கும் மதிப்பளித்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்றார்.
ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் காயமடைவோர்களுக்கு சிறந்த மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும், மாடுகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 4150 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 50 முதல் 1 லட்சம் பார்வையாளர்கள் வரை பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு 3 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கேலரியில் 8 ஆயிரம் பேர் வரை அமர்ந்து போட்டியை காணலாம்.ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக மாருதி ஆல்டோ காரும், இரண்டாம் பரிசாக மோட்டார் பைக்கும்,மூன்றாம் பரிசு ஸ்கூட்டரும் வழங்கப்படும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சிறந்த காளையை வளர்த்தவருக்கு நாட்டு மாடு சிறப்பு பரிசாக வழங்கப்படும். கோவை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடு பிடி வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் முதல் முறையாக இன்சூரஸ் செய்யப்பட உள்ளது என கூறினார்.
இதையும் படிக்க்:முதலமைச்சர் கோப்பை: வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்!