ETV Bharat / city

விபத்துகளை குறைக்கத்தான் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர் - விபத்துகளை குறைக்கத்தான் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது

கோயம்புத்தூர்: விபத்துக்களைக் குறைப்பதற்காகத் தான் இந்தியா முழுவதும் சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.

Fines increased for reduce accidents - Minister Vijayabaskar
author img

By

Published : Aug 31, 2019, 11:59 PM IST

அகில இந்திய போக்குவரத்துத் துறை தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கம் சார்பில் கோயம்புத்தூர் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரும், ஊரக வளர்ச்சி மற்றும் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணியும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைத்து விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுவதாகவும், விபத்துக்களைக் குறைப்பதற்காகத் தான் இந்தியா முழுவதும் சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் அதிகரித்துள்ளதாகவும் விளக்கமளித்தார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தப் போது..!

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் கூடிய விரைவில் 525 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அகில இந்திய போக்குவரத்துத் துறை தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கம் சார்பில் கோயம்புத்தூர் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரும், ஊரக வளர்ச்சி மற்றும் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணியும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைத்து விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுவதாகவும், விபத்துக்களைக் குறைப்பதற்காகத் தான் இந்தியா முழுவதும் சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் அதிகரித்துள்ளதாகவும் விளக்கமளித்தார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தப் போது..!

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் கூடிய விரைவில் 525 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Intro:ஊரக வளர்ச்சி மற்றும் செயலாக்கத் துறை அமைச்சர்
திரு.எஸ் பி வேலுமணி போக்குவரத்துத் துறை அமைச்சர்
திரு எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை துவக்கி வைத்தனர்.Body:சாலை விதிமீறல்களுக்கு அதிக அபராத தொகை விதிப்பது விபத்துகளை குறைக்கும் என போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்..

அகில இந்திய போக்குவரத்து துறை தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கம் சார்பில் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிகழ்ச்சிக்கு பின் கூட்டாக செய்தியாளர்களைக் சந்தித்தனர்.அப்போது விஜயபாஸ்கர் பேசுகையில்,
விபத்துகளைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற கருத்தரங்குகள் நடைபெறுகின்றது..
விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க வேண்டும்
விபத்தில்லா தமிழகம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில்
பள்ளிகளில் சாலை பாதுகாப்பு குழு ஆரம்பித்துள்ளோம். இது மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் என்று தெரிவித்த அமைச்சர் ,
சாலை விதிமீறல்களுக்கு அதிக அபராத தொகை விதிப்பது விபத்துகளை குறைக்கும் எனவும்
தமிழகத்தில் 525 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பிற்கு முன் கருத்தரங்கில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் நாட்டில் பொருளாதாரத்தை உயர்த்துவதில் போக்குவரத்து துறை முக்கிய பங்காற்றுவதாகவும்,
போக்குவரத்து துறையில் ஏற்பட்ட இடர்பாடுகளை கலைய, மத்திய அரசுடன் பேசி முதலமைச்சர் ஒரளவு வெற்றி பெற்றுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து துறை அதிகாரிகள் எடுத்த முயற்சியினால் ஒராண்டில் தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் 24 சதவீதம் குறைந்துள்ளது எனவும்
தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் 15 சதவீதம் விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நாடாளுமன்றத்தில் பேசியதைக் கூறிய அமைச்சர், சாலை பாதுகாப்பு மசோதாவில் 94 சட்ட திருத்தங்களில் 5 சட்ட திருத்தங்களில் மாநில உரிமை பாதிக்கப்படுகிறது. இவற்றில் திருத்தம் கேட்டுள்ளதாகவும் ,
தமிழ்நாட்டிற்கு என தனியாக சட்டம் கொண்டு வர முடியாது என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அழுத்தம் திருத்தமாக கூறியாதகவும் அவர் தெரிவித்தார்.

சாலை விபத்துகளை அறவே மக்கள் கடைபிடிப்பதில்லை. இலங்கை, மொரிசீயஸ் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் சாலை விதிகளை கடைபிடிக்கின்றனர்.
எனவும் சாலை விதி மீறல் அதிகமாக உள்ளது. விதி மீறல்களுக்கு அபராத தொகை அதிகமாக உள்ளது. என கூறுபவர்கள் விதிகளை கடைபிடித்தால் தான் விபத்துகள் குறையும் ,அதிக அபரதாக தொகை கட்டவும் தேவையில்லை எனவும் கூறினார்.

சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நடைபெறுவதாகவும் கூறிய அமைச்சர்,
ஹெல்மேட் அணியாமல் காவலர்கள் பிடித்தால் அமைச்சர், எம்.எல்.ஏக்களுக்கு போன் வருவதாக அவர் தெரிவித்தார்.

கிராம பகுதியில் தலைகவசம் அணிவது குறைவாக உள்ளதாக வருத்தம் தெரிவித்த அமைச்சர், விபத்துகளில் 68 சதவீதம் பேர் தலை காயங்களால் உயிரிழக்கின்றனர்.எனவும் மேலை நாடுகளில் சைக்கிள் ஒட்டுபவர்கள் கூட தலைகவசம் அணிவதாகக் குறிப்பிடு பேசிய அவர்,
ஒரு நாளைக்கு 47 ஆக இருந்த சாலை விபத்து உயிரிழப்புகள் தற்போது 33 ஆக குறைந்துள்ளது எனவும்
தமிழ்நாட்டில் சாலைகள் தரமாக இருப்பதால் வாகனங்களின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகம் நடக்கின்றன.எனக்கூறினார்.சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, சாலை விபத்துகளை குறைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.