ETV Bharat / city

வைரல் வீடியோ: மதுப்பிரியர்களை தாக்கும் மாநகராட்சிப் பணியாளர்கள்!

author img

By

Published : Sep 12, 2021, 7:02 AM IST

கோயம்புத்தூர் அருகே மதுபோதையில் மாநகராட்சிப் பணியாளரை தாக்கிய இருவரை, சக மாநகராட்சிப் பணியாளர்கள் சராமாரியாகத் தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுப்பிரியர்களை தாக்கும் மாநகராட்சி பணியாளர்கள்
மதுப்பிரியர்களை தாக்கும் மாநகராட்சி பணியாளர்கள்

கோயம்புத்தூர்: ஒண்டிபுதூர் அடுத்த பட்டணம் செல்லும் சாலையில் அரசு மதுபானக்கடை ஒன்று இயங்கி வருகிறது. கரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடு காரணமாக இந்த பாரில் அமர்ந்து மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள பாரில் அமர்ந்து சிலர் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு ஆய்வு செய்ய மாநகராட்சிப் பணியாளர்கள் சென்றுள்ளனர். இந்த ஆய்வின்போது பாரில் அதிக பேர் இருந்ததால் அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

பாரில் தகராறு

அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். தொடர்ந்து கற்களைக் கொண்டு தங்களை தாக்க முயன்ற நிலையில், சக பணியாளர்களுக்கு அலுவலர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

மதுப்பிரியர்களை தாக்கிய மாநகராட்சி பணியாளர்கள்

இதனையடுத்து அங்கு சென்ற மாநகராட்சிப் பணியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடித்து அடித்து கைகளைக் கட்டி சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தியதில் மாநகராட்சிப் பணியாளரை தாக்கியவர்கள் நெசவாளர் காலணியைச் சேர்ந்த சுரேஷ், அசோக் குமார் எனத் தெரியவந்துள்ளது.

வைரலாகும் காணொலி

இவர்கள் மதுபோதையில் அவரிடம் தகராறில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது. மேலும், இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாநகராட்சிப் பணியாளர்கள் மதுபோதையில் இருந்தவர்களை தாக்கும் காணொலி அங்கிருந்த ஒருவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: டும் டும் டும்: மாட்டுவண்டியில் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய தம்பதி

கோயம்புத்தூர்: ஒண்டிபுதூர் அடுத்த பட்டணம் செல்லும் சாலையில் அரசு மதுபானக்கடை ஒன்று இயங்கி வருகிறது. கரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடு காரணமாக இந்த பாரில் அமர்ந்து மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள பாரில் அமர்ந்து சிலர் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு ஆய்வு செய்ய மாநகராட்சிப் பணியாளர்கள் சென்றுள்ளனர். இந்த ஆய்வின்போது பாரில் அதிக பேர் இருந்ததால் அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

பாரில் தகராறு

அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். தொடர்ந்து கற்களைக் கொண்டு தங்களை தாக்க முயன்ற நிலையில், சக பணியாளர்களுக்கு அலுவலர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

மதுப்பிரியர்களை தாக்கிய மாநகராட்சி பணியாளர்கள்

இதனையடுத்து அங்கு சென்ற மாநகராட்சிப் பணியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடித்து அடித்து கைகளைக் கட்டி சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தியதில் மாநகராட்சிப் பணியாளரை தாக்கியவர்கள் நெசவாளர் காலணியைச் சேர்ந்த சுரேஷ், அசோக் குமார் எனத் தெரியவந்துள்ளது.

வைரலாகும் காணொலி

இவர்கள் மதுபோதையில் அவரிடம் தகராறில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது. மேலும், இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாநகராட்சிப் பணியாளர்கள் மதுபோதையில் இருந்தவர்களை தாக்கும் காணொலி அங்கிருந்த ஒருவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: டும் டும் டும்: மாட்டுவண்டியில் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய தம்பதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.