ETV Bharat / city

நீர்வரத்து குறைந்ததால் காலவரையின்றி மூடப்பட்ட கோவை குற்றாலம்!

author img

By

Published : Mar 26, 2019, 4:07 PM IST

கோவை: கடும் வறட்சி காரணமாக கோவை குற்றாலத்தில் நீர்வரத்து குறைந்ததால் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

falls

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் திங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

ஆனால், கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், தற்போது கடும் வறட்சி ஏற்பட்டு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சிக்கு காலவரையற்ற தடை விதிக்கப்படுவதாக போளுவாம்பட்டி வனத் துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் மழைபெய்து நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போளுவாம்பட்டி வனச்சரகர் பழனிராஜா கூறுகையில், “கடுமையான வறட்சி நிலவுவதால் தண்ணீருக்காக யானை உள்ளிட்ட வன விலங்குகள் அருவிக்கு வருகின்றன. மிகக் குறைந்தளவே நீர் வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாது என்பதாலும், வனப்பகுதியில் எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு உள்ளதால் இந்த தடை அமலுக்கு வந்துள்ளதாகவும்,மழைபெய்து அருவியில். நீர் வந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்” எனத் தெரிவித்தார்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் திங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

ஆனால், கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், தற்போது கடும் வறட்சி ஏற்பட்டு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சிக்கு காலவரையற்ற தடை விதிக்கப்படுவதாக போளுவாம்பட்டி வனத் துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் மழைபெய்து நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போளுவாம்பட்டி வனச்சரகர் பழனிராஜா கூறுகையில், “கடுமையான வறட்சி நிலவுவதால் தண்ணீருக்காக யானை உள்ளிட்ட வன விலங்குகள் அருவிக்கு வருகின்றன. மிகக் குறைந்தளவே நீர் வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாது என்பதாலும், வனப்பகுதியில் எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு உள்ளதால் இந்த தடை அமலுக்கு வந்துள்ளதாகவும்,மழைபெய்து அருவியில். நீர் வந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்” எனத் தெரிவித்தார்.

சு.சீனிவாசன்.       கோவை


கடும் வறட்சி காரணமாக  கோவை குற்றாலத்தில் நீர் வரத்து குறைந்ததால் காலவரையின்றி
 மூடல்...


கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சூழல் சுற்றுலா தலமான கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு திங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்,  கடந்த பிப்ரவரி மாதம் துவக்கத்திலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.மேலும்  மழைப்பொழிவு இல்லாததால் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது மாவட்டத்தில் உள்ள குளம் குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை வேகமாக வறண்டு வருகிறது,இந்நிலையில் கோவை  குற்றாலம் நீர்வீழ்ச்சியில் கடந்த மாதமே நீர் வரத்து குறைய துவங்கியது தற்போது மிகவும் குறைந்து உள்ளதால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சிக்கு காலவரையற்ற தடை விதிக்கப்படுவதாக போளுவாம்பட்டி வனத்துறையினர் அறிவித்துள்ளனர் மேலும் மழை பெய்து நீர் வரத்து அதிகரித்தால் மட்டுமே பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளனர்.இது குறித்து போளுவாம்பட்டி வனச்சரகர் பழனிராஜா கூறுகையில் கடுமையான வறட்சி நிலவுவதால் தண்ணீருக்காக யானை உள்ளிட்ட வன விலஙகுகள் அருவிக்கு வருகின்றன. மிக குறைந்த அளவே நீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாது என்பதாலும், வனப்பகுதியில் எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு உள்ளதால் இந்த தடை அமுலுக்கு வந்துள்ளதாகவும்,மழை பெய்து அருவியில். நீர் வந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என தெரிவித்தார். மேலும் மாவட்ட வன அலுவலர் அறிவுறுத்தலின் பேரில் சூழல் சுற்றுலாவில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாற்று பணி வழங்கப்பட்டு வழக்கமான ஊதியம் கொடுக்கப்படும்  எனவும் தெரிவித்தார்.கடந்த 2014 ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.