ETV Bharat / city

திருடவந்த இளம் பெண்ணை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்

author img

By

Published : Jan 21, 2021, 1:16 PM IST

சென்னை: அம்பத்தூர் ஓரகடத்தில் திருடவந்த இளம் பெண்ணை வீட்டுக்குள் வைத்து பொது மக்கள் பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருடவந்த இளம் பெண் : வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொது மக்கள்
திருடவந்த இளம் பெண் : வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொது மக்கள்

சென்னை அம்பத்தூர் அருகே ஓரகடம் லட்சுமி அம்மன் நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, இவரின் மனைவி நிர்மலா(30). இருவரும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் வேலைக்கு செல்லும் போது 2 மகன்களையும் வீட்டில் விட்டுவிட்டு அக்கம் பக்கத்தினரை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்றதும் குழந்தைகள் தெருவில் விளையாடினர். அப்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர், சக்கரவர்த்தின் வீட்டுக்குள் புகுந்து பீரோவை திறந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் கதவை அடைத்து வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு உரிமையாளர் சக்கரவர்த்திக்கு தகவல் கொடுத்தனர் .

இதையடுத்து சக்கரவர்த்தி தனது செல்போனில் காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அம்பத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கதவை திறந்து உள்ளே இருந்த பெண்ணை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

இதில் சென்னை செங்குன்றம் மொண்டியம்மன் நகர் அண்ணாநகரை சேர்ந்த ரூபன் என்பவரின் மனைவி கோகிலா (29) என்பது தெரியவந்தது. புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோகிலாவை கைது செய்தனர். இதுபோல் வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளாரா என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கூட்டுறவு வங்கி கிளையில் திருட முயன்ற இளைஞர் கைது!

சென்னை அம்பத்தூர் அருகே ஓரகடம் லட்சுமி அம்மன் நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, இவரின் மனைவி நிர்மலா(30). இருவரும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் வேலைக்கு செல்லும் போது 2 மகன்களையும் வீட்டில் விட்டுவிட்டு அக்கம் பக்கத்தினரை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்றதும் குழந்தைகள் தெருவில் விளையாடினர். அப்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர், சக்கரவர்த்தின் வீட்டுக்குள் புகுந்து பீரோவை திறந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் கதவை அடைத்து வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு உரிமையாளர் சக்கரவர்த்திக்கு தகவல் கொடுத்தனர் .

இதையடுத்து சக்கரவர்த்தி தனது செல்போனில் காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அம்பத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கதவை திறந்து உள்ளே இருந்த பெண்ணை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

இதில் சென்னை செங்குன்றம் மொண்டியம்மன் நகர் அண்ணாநகரை சேர்ந்த ரூபன் என்பவரின் மனைவி கோகிலா (29) என்பது தெரியவந்தது. புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோகிலாவை கைது செய்தனர். இதுபோல் வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளாரா என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கூட்டுறவு வங்கி கிளையில் திருட முயன்ற இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.