ETV Bharat / city

'வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையத்துக்கு அனுப்பிவைக்கப்படும்'

author img

By

Published : Oct 19, 2019, 7:26 PM IST

சென்னை: வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் உபகரணங்கள் ஆகியவை அந்தந்த வாக்குச்சாவடி மையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சத்யபிரத சாகு

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கும் மாவட்டத்தில் உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இதுவரை ஒரு கோடியே இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம், நகை, மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் நாங்குநேரியில் கைப்பற்றப்பட்ட ரூ. 2.87 லட்சம் விவகாரத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கருதப்படும் நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்ட அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் உபகரணங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்ற அவர், வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணியில் தமிழ்நாடு முழுவதும் 47.83 விழுக்காடு வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரி பார்த்துள்ளனர் எனக் குறிப்பிட்டார். அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 98.71 விழுக்காடு வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரிபார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கும் மாவட்டத்தில் உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இதுவரை ஒரு கோடியே இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம், நகை, மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் நாங்குநேரியில் கைப்பற்றப்பட்ட ரூ. 2.87 லட்சம் விவகாரத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கருதப்படும் நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்ட அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் உபகரணங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்ற அவர், வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணியில் தமிழ்நாடு முழுவதும் 47.83 விழுக்காடு வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரி பார்த்துள்ளனர் எனக் குறிப்பிட்டார். அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 98.71 விழுக்காடு வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரிபார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Intro:Body:தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

இன்று மாலை 6 மணிக்குள் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவடியவுள்ள நிலையில் நாளை வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்களை அந்தந்த வாக்குசாவடி மையத்திற்க்கு அனுப்பிவைக்கப்படும். பின் தேர்தல் இயந்திரங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு பரிசோதித்து காண்பிக்கப்படும். மேலும் தேர்தலுக்கு இன்னும் 1 நாள் மட்டுமே இருக்கும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கும் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும் தேர்தல் பார்வையாளர்கள் இன்று முதல் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

இதுவரை நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், நகை மதுபானங்கள் ஆகியவை கைப்பற்ப்பட்டுள்ளது. ( 56 லட்சம் பணம், 27 லட்சம் மதுபானங்கள், 3.6 லட்சம் மதிப்பிலான வெள்ளி பரிசு பொருட்கள், இதர பொருட்கள் 14 லட்சம் )

இதுவரை பதியப்பட்ட வழக்குகள் மற்றும் பெறப்பட்ட புகார்கள் குறித்தான தகவல்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்திற்க்கு அனுப்பபட்டுள்ளது. வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

நாங்குநேரியில் கைப்பற்றப்பட்ட 2.87 லட்சம் விவகாரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்ட அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம்

சீமான் சர்ச்சை பேச்சு குறித்தான அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இன்று மாலைக்குள் கொடுக்கவுள்ளார். இதனை இந்திய தேர்தல் ஆணையத்திற்க்கு அனுப்பவுள்ளோம்

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பாணியில் தமிழகம் முழுவதும் 47. 83% வாக்காளர்கள் தங்கள் விவரங்களை சரி பார்த்துள்ளனர். இதில் அதிகபடியாக பெரம்பலூர் மாவட்டம் 98.71 % மக்கள் தங்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்களை சரிபார்த்துள்ள்னனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.