ETV Bharat / city

தீபாவளியை முன்னிட்டு திடீரென்று வெடிக்கும் சோதனைகள்

author img

By

Published : Oct 25, 2019, 6:58 AM IST

சென்னை: : அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையால் பொதுமக்கள், அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலத்தில் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அம்பத்தூர், ராம் நகரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் லாவண்யா தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

இதில் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடமும் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களிடமும் சோதனை செய்து அவர்கள் வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர், அந்த பணத்திற்கு உரிய ஆவணம் காட்டி விட்டு பணத்தை பெற்று செல்லுமாறு கூறியதால் பலர் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

இந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் நுழைவாயில் மூடப்பட்டு நடந்த இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் லஞ்ச ஒழிப்பு துறையினரின் திடீர் சோதனை அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க:

மின்வாரிய அலுவலர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் அளித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலத்தில் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அம்பத்தூர், ராம் நகரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் லாவண்யா தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

இதில் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடமும் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களிடமும் சோதனை செய்து அவர்கள் வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர், அந்த பணத்திற்கு உரிய ஆவணம் காட்டி விட்டு பணத்தை பெற்று செல்லுமாறு கூறியதால் பலர் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

இந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் நுழைவாயில் மூடப்பட்டு நடந்த இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் லஞ்ச ஒழிப்பு துறையினரின் திடீர் சோதனை அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க:

மின்வாரிய அலுவலர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் அளித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்!

Intro:அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.Body:அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக வந்த தகவலையடுத்து அம்பத்தூர், ராம் நகரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று மாலை லஞ்ச ஒழிப்பு துறை
ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தலைமையில் 3 வாகனங்களில் வந்த 10 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், சார்
பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். இதில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களிடம் சோதனை செய்து அவர்கள் வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்திற்கு உரிய ஆவணம் காட்டி விட்டு பணத்தை பெற்று செல்லுமாறு கூறியதால் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்த சோதனையின் போது சார் பதிவாளர் அலுவலகத்தின் நுழைவாயில் மூடப்பட்டது.
மேலும் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.