ETV Bharat / city

ராணுவ வீரரிடமே வழிப்பறி; பிடிபட்ட திருடர்கள்

author img

By

Published : Dec 6, 2021, 10:46 AM IST

சென்னையில் நடந்து சென்ற ராணுவ வீரரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்து சென்ற கொள்ளையர்களை ராணுவ வீரர்கள் மடக்கிப்பிடித்தனர்.

.
.

சென்னை: புனித ஜார்ஜ் கோட்டை, ராணுவ தலைமையகத்தில் பணிபுரிந்து வருபவர் ராணுவ வீரர் ஜாஸ்பர் சிங் (30). இவர் புனித ஜார்ஜ் கோட்டை ராணுவ அணிவகுப்பு மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 பேர் அவரிடம் கத்தியை காட்டி செல்போன் மற்றும் 1000 ரூபாய் பணத்தைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றுள்ளனர். அப்போது ஜாஸ்பர்சிங் கூச்சலிட அங்கிருந்த ராணுவ வீரர்கள் தப்பி ஓட முயன்ற 2 பேரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

செல்போன் மற்றும் 1000 ரூபாய் பறிமுதல்

இதனையடுத்து அங்கு சென்ற கோட்டை காவல் துறையினர், இரண்டு பேரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் இருவரும் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த முனிவேல் என்கிற ஜில்லா (22), பரத்(19) என தெரியவந்தது. மேலும், இருவர் மீதும் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமிருந்து செல்போன் மற்றும் 1000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பேசிக்கலாம் வாங்க.. காருக்குள் தனியார் நிறுவன இயக்குநர்... 10 பேர் கொண்ட கும்பலுக்கு வலை!

சென்னை: புனித ஜார்ஜ் கோட்டை, ராணுவ தலைமையகத்தில் பணிபுரிந்து வருபவர் ராணுவ வீரர் ஜாஸ்பர் சிங் (30). இவர் புனித ஜார்ஜ் கோட்டை ராணுவ அணிவகுப்பு மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 பேர் அவரிடம் கத்தியை காட்டி செல்போன் மற்றும் 1000 ரூபாய் பணத்தைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றுள்ளனர். அப்போது ஜாஸ்பர்சிங் கூச்சலிட அங்கிருந்த ராணுவ வீரர்கள் தப்பி ஓட முயன்ற 2 பேரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

செல்போன் மற்றும் 1000 ரூபாய் பறிமுதல்

இதனையடுத்து அங்கு சென்ற கோட்டை காவல் துறையினர், இரண்டு பேரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் இருவரும் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த முனிவேல் என்கிற ஜில்லா (22), பரத்(19) என தெரியவந்தது. மேலும், இருவர் மீதும் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமிருந்து செல்போன் மற்றும் 1000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பேசிக்கலாம் வாங்க.. காருக்குள் தனியார் நிறுவன இயக்குநர்... 10 பேர் கொண்ட கும்பலுக்கு வலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.