சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 805 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஜன. 07) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் இன்று 805 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதிதாக 911 நபர்கள் குணமடைந்துள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, இதுவரை மொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 23 ஆயிரத்து 986 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, எட்டு லட்சத்து நான்காயிரத்து 239 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 200 என உயர்ந்துள்ளது.
இன்று தமிழ்நாட்டில், புதிதாக 64 ஆயிரத்து 60 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 802 நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசம் பிகார், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒரு நபருக்கும் என 805 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 43 லட்சத்து 25 ஆயிரத்து 233 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 2,27,145
கோயம்புத்தூர் - 52,821
செங்கல்பட்டு - 50,412
திருவள்ளூர் - 42,929
சேலம் - 31,847
காஞ்சிபுரம் - 28,873
கடலூர் - 24,772
மதுரை - 20667
வேலூர் - 20,369
திருவண்ணாமலை - 19,222
தஞ்சாவூர் - 17322
திருப்பூர் - 17,292
தேனி - 16,950
விருதுநகர் - 16,428
கன்னியாகுமரி - 16,504
தூத்துக்குடி - 16,146
ராணிப்பேட்டை - 15,981
திருநெல்வேலி - 15,373
விழுப்புரம் - 15,058
திருச்சி - 14,327
ஈரோடு - 13,908
புதுக்கோட்டை - 11,446
கள்ளக்குறிச்சி - 10,826
திருவாரூர் - 11,000
நாமக்கல் - 11,327
திண்டுக்கல் - 11,031
தென்காசி - 8,308
நாகப்பட்டினம் - 8,240
நீலகிரி - 8,021
கிருஷ்ணகிரி - 7,930
திருப்பத்தூர் - 7,491
சிவகங்கை - 6,562
ராமநாதபுரம் - 6,352
தர்மபுரி - 6,484
கரூர் - 5,254
அரியலூர் - 4,647
பெரம்பலூர் - 2,258
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 930
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1027
ரயில் மூலம் வந்தவர்கள் - 428