ETV Bharat / city

ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக 68.26% வாக்குகள் - தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்

author img

By

Published : Oct 15, 2021, 10:48 PM IST

ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக 68.26%, அதிமுக 14.85 %, காங்கிரஸ் 2.32%, பாஜக 0.56%, சிபிஎம் 0.28%, சிபிஐ 0.21%, தேமுதிக 0.07% இடங்களையும், மற்ற கட்சிகள் 12.46% வாக்குகளையும் கைப்பற்றி உள்ளன என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

election
election

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட 35 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரணத் தேர்தல்களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், ஏனைய 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படாத மற்றும் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 09.10.2021 அன்று அமைதியான முறையில் நடைபெற்றது.

இந்த வாக்குப்பதிவில் மேற்படி மாவட்டங்களில் கீழ்க்கண்டவாறு வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • காஞ்சிபுரம் 72.33%
  • செங்கல்பட்டு 75.51%
  • வேலூர் 81.07%
  • ராணிப்பேட்டை 82.52%
  • திருப்பத்தூர் 77.85 %
  • விழுப்புரம் 85.31%
  • கள்ளக்குறிச்சி 82.59%
  • திருநெல்வேலி 69.34%
  • தென்காசி 73.35 %

என மொத்தம் 78.47% விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. 28 மாவட்டங்களில் நடைபெற்ற தற்செயல் தேர்தல்களில் 70.51% வாக்குகள் பதிவாகியுள்ளன. தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவசைலம் கிராம ஊராட்சி, வார்டு எண் 3க்கு நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 80.79 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக 68.26%, அதிமுக 14.85 %, காங்கிரஸ் 2.32%, பாஜக 0.56%, சிபிஎம் 0.28%, சிபிஐ 0.21%, தேமுதிக 0.07% வாக்குகளையும் பிற கட்சிகள் 12.46% வாக்குகளையும் கைப்பற்றி உள்ளன.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி சூதாட்டங்களுக்கு மீண்டும் தடை?

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட 35 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரணத் தேர்தல்களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், ஏனைய 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படாத மற்றும் காலியாக உள்ள பதவியிடங்களுக்கான தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 09.10.2021 அன்று அமைதியான முறையில் நடைபெற்றது.

இந்த வாக்குப்பதிவில் மேற்படி மாவட்டங்களில் கீழ்க்கண்டவாறு வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • காஞ்சிபுரம் 72.33%
  • செங்கல்பட்டு 75.51%
  • வேலூர் 81.07%
  • ராணிப்பேட்டை 82.52%
  • திருப்பத்தூர் 77.85 %
  • விழுப்புரம் 85.31%
  • கள்ளக்குறிச்சி 82.59%
  • திருநெல்வேலி 69.34%
  • தென்காசி 73.35 %

என மொத்தம் 78.47% விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. 28 மாவட்டங்களில் நடைபெற்ற தற்செயல் தேர்தல்களில் 70.51% வாக்குகள் பதிவாகியுள்ளன. தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவசைலம் கிராம ஊராட்சி, வார்டு எண் 3க்கு நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 80.79 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக 68.26%, அதிமுக 14.85 %, காங்கிரஸ் 2.32%, பாஜக 0.56%, சிபிஎம் 0.28%, சிபிஐ 0.21%, தேமுதிக 0.07% வாக்குகளையும் பிற கட்சிகள் 12.46% வாக்குகளையும் கைப்பற்றி உள்ளன.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி சூதாட்டங்களுக்கு மீண்டும் தடை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.