ETV Bharat / city

'உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்'

author img

By

Published : Nov 14, 2020, 8:56 PM IST

சென்னை: மதுரையில் தீயணைக்கும்போது சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த இரண்டு தீயணைப்புப்படை வீரர்களின் குடும்பங்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்தார்.

tn-deputy-chief-minister-o-panneerselvam
tn-deputy-chief-minister-o-panneerselvam

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர். இந்தச் செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, விபத்தில் காயமடைந்தோர் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர். இந்தச் செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, விபத்தில் காயமடைந்தோர் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மதுரை தீ விபத்து எதிரொலி: பழமையான கட்டடங்கள் குறித்து விரைவில் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.