ETV Bharat / city

கூட்டம் கூட்டமாக சென்னையிலிருந்து வெளியேறும் மக்கள்!

author img

By

Published : Jun 18, 2020, 5:16 PM IST

சென்னை: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதையடுத்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்னையிலிருந்து வெளியேறிவருகின்றனர்.

Thousands of people leaving chennai
Thousands of people leaving chennai

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதைக் கருத்தில் கொண்டு நாளை முதல் 30ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு அமலுக்குவருகிறது. இதன் காரணமாக சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு மக்கள் அதிக அளவில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மூலம் பொதுமக்கள் செல்வதால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து வெளியேறும் மக்கள்

அதிகளவில் வாகனங்கள் படையெடுத்துள்ளதால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்களை காவல் துறையினர் கண் துடைப்புக்காகவே சோதனைச் செய்கின்றனர். கரோனா தொற்று மற்ற மாவட்டங்களுக்கு பரவாமல் தடுக்க வாகன ஓட்டிகளை காவல்துறையினருடன் சுகாதாரத் துறையினரும் இணைந்து சோதனை செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: மாலை 6 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் - வர்த்தகர்கள் சங்கம் முடிவு

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதைக் கருத்தில் கொண்டு நாளை முதல் 30ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு அமலுக்குவருகிறது. இதன் காரணமாக சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு மக்கள் அதிக அளவில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மூலம் பொதுமக்கள் செல்வதால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து வெளியேறும் மக்கள்

அதிகளவில் வாகனங்கள் படையெடுத்துள்ளதால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்களை காவல் துறையினர் கண் துடைப்புக்காகவே சோதனைச் செய்கின்றனர். கரோனா தொற்று மற்ற மாவட்டங்களுக்கு பரவாமல் தடுக்க வாகன ஓட்டிகளை காவல்துறையினருடன் சுகாதாரத் துறையினரும் இணைந்து சோதனை செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: மாலை 6 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் - வர்த்தகர்கள் சங்கம் முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.