ETV Bharat / city

ஓர் இரவில் நடக்கும் கதையே “இரவு”

ஓர் இரவில் நடக்கும் கதையை திரைப்படமாக எடுத்துள்ளோம் என “இரவு” திரைப்படத்தின் படக்குழு தெரிவித்துள்ளது.

author img

By

Published : Sep 11, 2022, 1:11 PM IST

Etv Bharat
Etv Bharat



சென்னை: பக்ரீத் பட இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில், ‘எட்டு தோட்டக்கள்’ பட நாயகன் வெற்றி, ஷிவானி நாராயணன் நடிக்கும் திரைப்படமான “இரவு” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் வெற்றி, தரமான படங்களை தந்து பாரட்டுக்களை குவித்த இயக்குநர் ஜெகதீசன் சுபு உடன் கைகோர்த்துள்ளார். வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள் நேரில் வர ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே இந்தத் திரைப்படம். ஒரு திரில்லர் டிராமாவாக உருவாகியிருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

இப்படத்தில் மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஓர் இரவில் நடக்கும் இக்கதை, முழுக்க சென்னை ஈசிஆர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பாக்கலாம்.


இதையும் படிங்க: 'Qantityயை விட Quality தான் முக்கியம்...!’ - நடிகர் ஜெயம் ரவி



சென்னை: பக்ரீத் பட இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கத்தில், ‘எட்டு தோட்டக்கள்’ பட நாயகன் வெற்றி, ஷிவானி நாராயணன் நடிக்கும் திரைப்படமான “இரவு” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் வெற்றி, தரமான படங்களை தந்து பாரட்டுக்களை குவித்த இயக்குநர் ஜெகதீசன் சுபு உடன் கைகோர்த்துள்ளார். வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள் நேரில் வர ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே இந்தத் திரைப்படம். ஒரு திரில்லர் டிராமாவாக உருவாகியிருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

இப்படத்தில் மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஓர் இரவில் நடக்கும் இக்கதை, முழுக்க சென்னை ஈசிஆர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பாக்கலாம்.


இதையும் படிங்க: 'Qantityயை விட Quality தான் முக்கியம்...!’ - நடிகர் ஜெயம் ரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.